இந்தியாவில் 21 மாநிலங்களுக்கு ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை பரவியுள்ள நிலையில், தலைநகர் புதுடெல்லியில் மஞ்சள்
எச்சரிக்கை அமல்படுத்தப்
பட்டுள்ளது.
இந்தப் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடப்புக்கு வருகின்றன. இதையடுத்து, பள்ளிகள், கல்லூரி கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் உணவகங்களில் 50% இருக்கைகளை
மட்டுமே பயன்படுத்தலாம். இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த சில நாள்களாகத் தொற்று உறுதியாகும் விகிதம் 0.5 விழுக்காடாக உள்ளதால், முதல்கட்டமாக மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்படுகிறது.
விரைவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று அம்மாநில முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று
தெரிவித்தார். நேற்று முன்தினம் மட்டும் அங்கு 331 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்
பட்டது. இதுவே கடந்த ஆறு மாதங்களில் அங்கு பதிவாகியுள்ள ஆக அதிகமான ஒருநாள் பாதிப்பு.
டெல்லி, மகராஷ்டிரா மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் பதிவான 6,354 புதிய தொற்று சம்பவங்களில் 653 ஓமிக்ரான் தொற்று சம்பவங்களாக உள்ளன.
கிருமி பாதிப்பைக் குறைக்க தடுப்பூசி இயக்கத்தை இந்தியா மேலும் முடுக்கிவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரு நோய்எதிர்ப்பு மாத்திரைக்கும் அவசரக்காலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி அளித்துள்ளது.
"கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் வகையில், இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரே நாளில் மூன்று மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது," என்று சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அனுமதி அளிக்கப்பட்டுள்ள சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசியையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தலாம். இவற்றை சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தலாம் எனக் கூறப்
பட்டுள்ளது. இவற்றுக்கான இறுதி ஒப்புதலை இந்திய மருந்துக்
கட்டுப்பாட்டு அமைப்பு விரைவில் வழங்கும் எனத் தெரிகிறது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள 'மால்னுபிராவிர்' எனும் கிருமி எதிர்ப்பு மாத்திரைக்கு 10 நிறு
வனங்கள் இதுவரை மருந்தகநிலை பரிசோதனையை முடித்துள்ளன. இது கிருமி பாதிப்பை 30% குறைப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிதான் மக்களுக்குப் பரவலாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் தடுப்பூசி புழக்கத்தில் இருந்தாலும் மிகக் குறைவாகவே செலுத்தப்
படுகிறது. 15 வயதுக்கும் மேற்பட்ட சிறாருக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் தடுப்பூசியும் முன்
களப் பணியாளா்கள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவா்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

