அமைச்சர் சான்: தடுப்பூசி போட அதிகமான மாணவர்கள் பதிவு

அமைச்சர் சான்: தடுப்பூசி போட அதிகமான மாணவர்கள் பதிவு

2 mins read

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தொடக்­க­நிலை 4 முதல் 6 வரை பயி­லும் மாண­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் பதிவு செய்து கொண்­டுள்­ள­னர். இவர்­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தங்­க­ளது முதல் தடுப்­பூ­சியை கடந்த இரு நாட்­களில் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இதைத் தமது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்த கல்­வி­ய­மைச்­சர் சான் சுன் சிங், "பெற்­றோர் பலர் தங்­கள் பிள்­ளை­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வெள்­ளிக்­கிழமை­யில் இருந்து ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்கு இடைப்­பட்ட காலத்­தில் நேரம் பதிவு செய்ய விரும்­பு­வதை நான் அறி­வேன்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள திங்­கள்­கி­ழ­மை­யில் இருந்து வியா­ழக்­கி­ழ­மைக்கு உட்­பட்ட காலத்­தி­லும் பதிவு செய்­து­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன். இத­னால் விரை­வா­கவே ஊசி­போ­டும் நேரத்­தைப் பெற­லாம் என்று கூறி­யுள்ளார்.

"பள்ளி நேரங்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டாலோ, தடுப்­பூசி கார­ண­மாக உடல்­ந­லக் குறைவு ஏற்­பட்­டாலோ மாண­வர்­க­ளுக்கு மருத்­துவ விடுப்பு கிடைக்­கும் என்­பதை உறுதி கூறு­கி­றேன். தேவை­யா­னால், விட்­டுப்­போன பாடங்­களை அவர்­கள் கற்­றுக்­கொள்ள பள்­ளி­கள் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்­ளும்," என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

கல்வி அமைச்­சின்கீழ் வராத பள்­ளி­களில் பயி­லும் ஒன்­ப­தி­லி­ருந்து பதி­னொரு வய­துக்­குட்­பட்ட மாண­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யி­லி­ருந்து இது­வரை 5,000க்கும் மேற்­பட்ட பதி­வு­கள் தேசியப் பதிவுமுறை­யின்கீழ் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கல்வி அமைச்­சின்­கீழ் வரும் பள்­ளி­களில், மத­ரசா பள்­ளி­களில் பயி­லும் தொடக்க நிலை 4 முதல் 6 வரை பயி­லும் மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பதிவு செய்­து­கொள்­ளும்­படி சென்ற புதன்­கி­ழமை அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

வரும் ஜன­வரி மாதம் 5ஆம் தேதி­யி­லி­ருந்து தொடக்­க­நிலை 1 முதல் 3 வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான பதி­வு­கள் தொடங்­கும். ஜன­வரி 6லிருந்து 5 வயது முதல் 8 வய­துக்­குட்­பட்ட அனைத்து மாண­வர்­களும் தடுப்­பூ­சிக்கு பதிவு செய்­து­கொள்­ள­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்தை 5 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­துப் பிள்­ளை­க­ளுக்­கும் நீட்­டிப்­பதன் மூலம் ஏறக்­கு­றைய 300,000 பிள்­ளை­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வகை­செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவே தடுப்­பூசி போடப்­படாத ஆகப்பெரிய குழு­மம் என்று கூறப்­ப­டு­கிறது.

"மருத்­துவ ரீதி­யாக நம் பிள்­கை­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளக்­கூ­டிய நிலை­யில் இருந்­தால், அவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வோம். இது அவர்­க­ளை­யும் நமது சமூ­கத்­தை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும்," என்று திரு சான் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போடப்­பட்டு வரும் இந்த ஓராண்டு காலத்­தில், மொத்த மக்­கள்­தொகை­யில் 87 விழுக்­காட்­டி­னர் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்­கொண்­டுள்­ள­னர். 38 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் ஊசி போட்­டுள்­ள­னர். ஆக்ஸ்­ஃபர்டு ஆய்­வுத் திட்­ட­மான 'அவர் வேர்ல்­டின்' தர­வு­க­ளின்படி, சிங்­கப்­பூர் தற்­போது உல­க தடுப்­பூசி விகி­தத்­தில் ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளது.