கொவிட்-19 'பேரலை' அபாயம்

கொவிட்-19 'பேரலை' அபாயம்

2 mins read

டெல்டா, ஓமிக்ரான் என இரட்டை அச்சுறுத்தலால் கவலை

உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மி­க­ளான டெல்­டா­வும் ஓமிக்­ரா­னும் தொற்­றுப் பாதிப்பை 'சுனாமி' போன்று பேர­ள­விற்கு இட்­டுச் செல்­லும் அபா­யத்தை ஏற்­படுத்தி வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் கேப்­ரி­யே­சுஸ் எச்­ச­ரித்­துள்­ளார்.

கவ­லைக்­கு­ரிய திரி­பு­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள டெல்டா மற்­றும் ஓமிக்­ரானை 'இரட்டை அச்­சு­றுத்­தல்­க­ளாக' உலக சுகா­தார நிறு­வ­னம் புதன்­கி­ழமை வர்­ணித்­துள்­ளது. இவ்­விரு திரி­பு­களும் தொற்­றுப் பாதிப்­பு­க­ளைப் புதிய உச்­சத்­துக்கு இட்­டுச்­செல்­கின்­றன. இத­னால், கொரோனா பாதிப்­பால் மருத்­து­வ­மனை­களில் சேர்க்­கப்­ப­டு­வோர், உயிரிழப்போர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

"டெல்டா பர­வும் அதே நேரத்­தில், வேக­மா­கப் பர­வக்­கூ­டிய ஓமிக்­ரா­னும் பரவி வரு­வ­தால், 'சுனாமி' போன்ற பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது எனக்கு மிக­வும் கவ­லை­ய­ளிக்­கிறது," என்று திரு டெட்­ரோஸ், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

"இது, ஏற்­கெ­னவே சோர்­வ­டைந்­துள்ள சுகா­தார ஊழி­யர்­க­ளுக்­குத் தொடர்ந்து அள­விற்கு அதி­க­மான நெருக்­கு­தலை அளித்து, சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு கவிழ்ந்­து­வி­டும் நிலைக்­குத் தள்­ளி­வி­டும்," என்­றார் அவர்.

கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோர் மட்­டு­மின்றி, பெரும் எண்­ணிக்­கை­யில் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­களும் தொற்­றுக்கு ஆளா­வ­தால் சுகா­தா­ரக் கட்­ட­மைப்­புக்கு நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ள­தாக டாக்­டர் டெட்­ரோஸ் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு கொவிட்-19க்கு எதி­ரான போரை நினை­வு­ப­டுத்­திய உலக சுகா­தார நிறு­வ­னம், பெருந்­தொற்­றின் மிகக் கடு­மை­யான நிலை அடுத்த ஆண்டு ஒரு முடி­வுக்கு வரும் என்ற நம்­பிக்­கை­யு­டன் இருக்கிறது. ஆனாலும், தடுப்­பூசி விநி­யோ­கத்தில் பேணப்படும் சரிவிகிதத்தைப் பொறுத்தே அது அமையும் என்று அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், 2022 நடுப்­ப­கு­திக்­குள் ஒவ்வொரு நாட்டிலும் 70 விழுக்­காட்டினருக்குத் தடுப்பூசி போட உறுதிகொள்ளுமாறு டாக்டர் டெட்ரோஸ் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.