தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் வெள்ள அபாயம்: 5,400 பேர் அவசர வெளியேற்றம்

2 mins read

மழை விட்டு விட்­டுப் பெய்து பய­மு­றுத்­து­வ­தால் 5,400க்கும் மேற்­பட்ட ஜோகூர் மாநில குடி­யி­ருப்­பு­வா­சி­கள் பாது­காப்­பான இடத்­திற்கு மாற்­றப்­பட்டு உள்­ள­னர்.

திங்­கட்­கி­ழமை வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 4,737 ஆக இருந்த நிலை­யில் ேநற்று மேலும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் பாது­காப்­பான இடத்­திற்கு மாற்­றப்­பட்­ட­னர். நேற்­றைய நண்­ப­கல் நில­வ­ரப்­படி 5,479 பேர் அவ்­வாறு இடம்

­பெ­யர்ந்துவிட்­ட­தாக ஜோகூர் மாநில சுகா­தார, சுற்­றுப்­பு­றக்குழு­வின் தலை­வர் ஆர் வித்­ய­ நா­தன் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் மழை­யால் மோச­மான பாதிப்பை எதிர்­நோக்­கும் ஏழு மாட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இந்­தக் குடி­யி­ருப்­பு­வா­சி­கள். இவற்­றில் சிகா­மட் மாவட்­டம்­தான் அதிக பாதிப்­புக்கு உள்­ளா­னது.

பெரு­ம­ழை­யால் ஏற்­பட்ட வெள்­ளம் கார­ண­மாக அந்த மாவட்­டத்­தில் இருந்து மட்­டும் 4,000க்கும் மேற்­பட்­டோர் நிவா­ரண முகாம்­

க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்டுள்­ள­னர்.

மேலும், இந்த மாவட்­டத்­தில் ஓடும் ஐந்து ஆறு­களில் நான்­கின் நீர்­மட்­டம் அபாய அளவை எட்­டி­விட்­ட­தாக மாநில நீர்ப்­பா­சன, வடி­கால் துறை நேற்று தெரி­வித்­தது.

அபா­யத்­தில் சிக்­கி­வி­டா­மல் மீட்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக 79 தற்­கா­லிக நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அங்கு அவர்­ க­ளுக்கு உணவு அளிக்­கப்­படும் என்­றும் திரு வித்­ய­நா­தன் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், கொவிட்-19 பாது­காப்பு நடை­

மு­றை­கள் இந்த முகாம்­களில் அமல்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தா­க­வும் முகாம்­க­ளுக்­குள் நுழை­யும் முன்­னர் குடி­யி­ருப்­பு­வாசிகளின் உடல் வெப்­ப­நி­லை­யும் நோய் அறி­கு­றி­களும் சோதிக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, மலே­சிய வானிலை ஆய்­வுத் துறை நேற்று பிற்­ப­கல் 3.10 மணி­ய­ள­வில் ஜோகூர் மாநி­லத்­தின் தெற்கு வட்­டா­ரங்

­க­ளுக்­கான மழை, வெள்ள எச்­ச­ரிக்­கையை விடுத்­தது.

ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, பொந்தியான் மற்­றும் கூலாய் போன்ற பகு­தி­கள் கடு­மை­யான மழையை எதிர்­நோக்­க­லாம் என்று அந்த எச்­ச­ரிக்கை அறி­விப்­பில் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.