ஏஎஃப்பி: உலகில் தினமும் 2 மில்லியன் பேருக்குத் தொற்று

ஏஎஃப்பி: உலகில் தினமும் 2 மில்லியன் பேருக்குத் தொற்று

1 mins read
ed78aef8-b939-4f18-acbe-961a45839a06
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் தலைநகரான ஹூஸ்டனில் கிருமிப் பரிசோதனை நிலையங்களை மருத்துவ ஊழியர்கள் அமைக்கின்றனர். டெக்சஸில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடியுள்ளன. அதனால் விரைவுப் பரிசோதனைக் கருவிகளுக்கு அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் 7ஆம் தேதிகள் வரை உலகில் தினமும் சராசரியாக 2.1 மில்லியன் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக ஏஎப்ஃபி கூறியுள்ளது. -

ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை உலகில் தினமும் சராசரியாக 2.1 மில்லியன் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக ஏஎப்ஃபி செய்தி நிறுவனம் கணக்கிட்டுக் கூறியுள்ளது.

ஒப்புநோக்க, டிசம்பர் 23 முதல் 29 வரை தினமும் சராசரியாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன.

மறு வாரத்தில், புதிய அன்றாடத் தொற்றுச் சம்பவங்கள் 2,106,118 எனும் சராசரிய எண்ணிக்கையில் உள்ளன.

ஓமிக்ரான் வகைக் கிருமி நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட பின்னர் உலக அளவிலான புதிய தொற்றுச் சம்பவங்கள் 270 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஏஎப்ஃபி கூறியது.

மேலும், ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை கொவிட்-19 தொடர்பான 6,237 மரணங்கள் நிகழ்ந்தன.

2020 அக்டோபருக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகியவற்றில்தான் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது.

இந்த வாரம் உலக அளவில் பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களில் 49 விழுக்காடு, ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தன.

அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளிலும் சுமார் 33 விழுக்காட்டு புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன.