புதிய வகைத் தொற்றுகள் உருவாகும் நிலையில் ஒரே தடுப்பூசிக்குரிய கூடுதல் தடுப்பூசிகளை மீண்டும் மீண்டும் போடுவது என்பது பயன்தரக்கூடிய உத்தியாக இருக்காது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.
அதற்குப் பதிலாக, தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பைத் தரக்கூடிய புதிய தடுப்பூசிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அதன் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்
படுத்தப்பட்ட நிபுணர் குழு ஒன்று கொவிட்-19 தடுப்பூசிகளின் செயல்பாடுகளை ஆராய்ந்த பின்னர் தனது கருத்துகளை வெளியிட்டது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசியின் புதிய மருந்தை அளிப்பது கொள்ளை நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான நடவடிக்கையாக இருக்காது என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. நடப்பில் இருக்கும் தடுப்பூசிகள் புதிய வகை ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் மக்களிடம் குறைவான எதிர்ப்பாற்றலைத் தருவதாக கொவிட்-19க்கான அக்குழு தனது முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

