இந்தியாவில் கிருமித்தொற்று 27.1 விழுக்காடு அதிகரிப்பு

இந்தியாவில் கிருமித்தொற்று 27.1 விழுக்காடு அதிகரிப்பு

1 mins read

இந்தி­யா­வில் நேற்று புதி­தாக 247,417 பேருக்கு கொவிட்-19 கிருமித்­தொற்று ஏற்­பட்­ட­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட புள்ளி விவ­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. இந்த எண்­ணிக்கை, நேற்று முன்­தி­னம் பதி­வா­ன­தை­விட 27.1 விழுக்­காடு அதி­கம்.

இத­னைத் தொடர்ந்து ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இந்­தி­யா­வில் இது­வரை குறைந்­தது 3.63 மில்­லி­யன் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. அவர்­களில் 5,488 பேருக்கு ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரில் மேலும் 481 பேர் மர­ண­ம­டைந்­தனர். இந்­தி­யா­வில் இது­வரை குறைந்­தது 484,859 கொவிட்-19 நோயா­ளி­கள் மடிந்­து­விட்­ட­னர்.

கேரள மாநி­லத்­தில்­தான் ஆக அதி­க­மா­னோர் மாண்­ட­னர். அம்­மா­நி­லத்­தில் இதுவரை 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்­த­ப­டி­யாக டெல்லி­யில் அதிகமானோர் மாண்­ட­னர்.

நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்ட குறைந்­தது 3.47 மில்­லியன் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். நேற்று மட்­டும் 84,825 கொவிட்-19 நோயா­ளி­கள் குண­ம­டைந்­த­னர்.

இந்­தி­யா­வில் இது­வரை கிருமித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரில் 95.59 விழுக்­காட்­டி­னர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் குறைந்­தது 1.88 மில்­லி­யன் மக்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அதோடு, 24 மணி­நே­ரத்­தில் சுமார் 7.6 மில்­லி­யன் மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.