அமைச்சர் ஓங்: முன்னேற தரமான ஆளுமை தேவை

அமைச்சர் ஓங்: முன்னேற தரமான ஆளுமை தேவை

2 mins read

கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்­குப் பிந்­திய உல­கில் போட்­டித்­தன்மை மிகுந்த சூழ­லுக்­குப் பொருந்­தும் வகை­யில் தன்­னைத் தொடர்ந்து புதுப்­பித்­துக்­கொண்டே இருப்­ப­து­தான் சிங்­கப்­பூர் போன்ற ஒரு நக­ரம் மேற்கொள்ளவேண்டிய பெரிய முயற்சி என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்ளார். கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் நக­ரங்­க­ளைப் பற்­றிப் பேசும்­போது திரு ஓங் இத­னைக் குறிப்­பிட்­டார்.

நாடா­க­வும் நக­ர­மா­க­வும் இருக்­கும் 730 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வைக் கொண்ட சிங்­கப்­பூ­ரில், பர­ப­ரப்­பான பொரு­ளி­யல் மையம், அதற்கு அப்­பால் இருக்­கும் அமை­தி­யான குடியிருப்புப் பேட்­டை­கள் என்று வெவ்­வேறு பகுதிகள் கிடை­யாது.

அத­னால் சிறிய தீவான சிங்­கப்­பூ­ரின் ஐந்து மில்­லி­யன் மக்­க­ளுக்கு இருக்­கும் மாறு­பட்ட ஆசை­க­ளைப் பூர்த்­தி­செய்ய நாட்டை ஆக்­க­க­ர­மான முறை­யில் வழி­ந­டத்­து­வ­தும் சரி­யான அர­சி­யல் சூழலை உரு­வாக்­கு­வ­தும் முக்­கி­யம் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"முடிவே இல்­லா­மல் வாக்­கு­வா­தங்­களில் ஈடு­ப­டு­வது, தீர்­வு­களே காணா­மல் இருப்­பது ஆகி­ய­வற்­றுக்கு வழி­வ­குப்­ப­தற்­குப் பதி­லாக அர­சி­யல் முறை ஆக்­க­க­ர­மாக இருப்­ப­து­டன் வேறு­பா­டு­களைச் சரி­செய்­ய­வேண்­டும். அதி­ருப்தி தரக்­கூ­டிய முடி­வு­களை எடுக்­க­வேண்­டிய நிலை உரு­வா­னா­லும் நாட்டை முன்­னுக்­குக் கொண்­டு­வர வகை­செய்­வதே அர­சி­யல் முறை­யின் குறிக்­கோளாக இருக்­க­வேண்­டும்," என்று அவர் சுட்­டி­னார்.

"இது குறிப்­பாக சிங்­கப்­பூ­ருக்கு முக்­கி­யம். போது­மான வளங்­களும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நிலப்­ப­ரப்­பும் நம்­மி­டையே இல்­லா­விட்­டா­லும், துரி­த­மாக இயங்­கு­வது, குறிக்­கோ­ளு­டன் செய­லில் ஈடு­ப­டு­வது ஆகி­ய­வற்­றின் மூலம் அந்த குறை­பாட்டை ஈடு­கட்­ட­லாம்," என்று திரு ஓங் சொன்­னார்.

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரைப்­போ­லவே சிங்­கப்­பூ­ரும் ஒரு நவீன மாந­க­ர­மாக விளங்கு­வதோடு உல­கு­டன் தொடர்­பில் இருக்­க­வேண்­டிய ஓர் உலகளாவிய பொரு­ளி­யல் மைய­மா­க­வும் இருக்­கிறது என்று திரு ஓங் கூறி­னார்.

சிங்கப்பூரின் ஆட்சி முறை

அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­களில் இருப்­ப­தைப் போல் சிங்­கப்­பூ­ரில் ஆட்­சி­யைப் பிடிக்க இரண்டு கட்­சி­கள் போட்டி­யி­டும் சூழல் உரு­வாக அதிக வாய்ப்­பில்லை என்­றும் திரு ஓங் குறிப்­பிட்­டார். ஓர் அர­சி­யல் கட்சி மீது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அதி­ருப்தி ஏற்­பட்­டால் அதை நக­ரம் முழு­வ­தும் உண­ர­மு­டி­யும். அதே­போல், அர­சாங்­கம் சிறப்­பா­கச் செய்து மக்­கள் மகிழ்ச்­சி­யாக இருந்­தால் அந்த உணர்­வும் "தீவு முழு­வ­தும் பர­வும்," என்று திரு ஓங் கூறி­னார்.

மக்­கள் செயல் கட்சி தற்­போது ஆளும் கட்­சி­யாக இருக்­க­லாம். அதற்­காக அது மெத்­த­ன­மாக இருந்­து­வி­டா­மல் மக்­கள் அதன் மீது வைஙததுள்ள நம்­பிக்­கையை என்­றும் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

"அத­னால், ஆளும் கட்­சி­யாக இருக்­கும்­போது நமது முன்­னோர்­க­ளின் நல்ல வேலை தொடர்­வதை நாங்­கள் உறு­திப்­படுத்­த­வேண்­டும், பொறுப்புள்ள அர­சாங்­க­மாக இருப்­பதை உறு­தி­செய்­ய­வேண்­டும்," என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

லீ குவான் இயூ பொதுக் கொள்­கைப் பள்­ளி­யின் கொள்கை ஆய்­வுக் கழ­கம் ஏற்­பாடு செய்த 'சிங்­கப்­பூர் கண்­ணோட்­டம் 2022' கலந்­து­ரை­யா­ட­லில் திரு ஓங் பேசி­னார்.