எதிர்வரும் செவ்வாய்க்கிழமைதைப்பூசத் திருநாளன்று கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் மருத்துவ அடிப்படையில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறாதவர்களும் 12 வயதுக்கும் குறைவான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத
சிறாரும் இதற்கு விதிவிலக்கு.
கோயிலில் அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக
மட்டுமே இறை வழிபாட்டில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத் திருநாளன்று டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு மொத்தம் 14,000 பக்தர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் 7,000 பேர் பால்குடம் எடுப்பர் என்று கோயில் கூறியது. பால்குடம் எடுப்பவர்
களுக்கென்றே தனி வரிசை இருக்கும்.
அதன் வழியாக அவர்கள் இரண்டிரண்டு பேராகக் கோயிலுக்குள் நுழையலாம்.
திங்கட்கிழமை நள்ளிரவி
லிருந்து செவ்வாய்க்கிழமை 10 மணி வரை கோயிலுக்குள்
பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாண்டு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் காவடிகளை ஏந்திக்கொண்டு பாத யாத்திரையாகச் செல்வதைப் பார்க்க முடியாது. கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
டேங்க் ரோட்டுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் பக்தர்களுக்கு உதவும் வகையில் தடுப்புகளும் திசைக்காட்டிகளும் வைக்கப்படும்.
டேங்க் ரோடு அன்று போக்கு
வரத்துக்கு மூடப்பட்டிருக்கும். 600 தொண்டூழியர்கள் பக்தர்
களுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபடுவர்.
கோயிலுக்குள் செல்ல இரண்டு வெவ்வேறு நுழைவாயில்கள்
திறந்துவிடப்பட்டிருக்கும்.
அவற்றுக்குத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பாதையில் செல்பவர் மற்றொரு பாதையில் செல்பவருடன் தொடர்பில் இருக்கக்கூடாது. கோயிலுக்குள் செல்லும் அனைத்து பக்தர்களும் டிரேஸ்டுகெதர் செயலி அல்லது சாதனம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நேர்த்திக்கடன் செலுத்து
பவர்களைத் தவிர்த்து, முன்பதிவு செய்திருந்த மற்றவர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு டேங்க் ரோட்டுக்குள் நுழையும் இடத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்துகொண்ட பிறகு கோயிலுக்குச் செல்லும் தடங்களில் அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்களாகச் செல்லலாம். கோயில் சன்னதியில் இறை வழிபாட்டுக்குப் பிறகு கோயிலில் இருந்து வெளியேறும் இடம் எங்குள்ளது என அவர்களுக்குத் தெரி விக்கப்படும்.
பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் ரிவர் வேலி சாலையில் உள்ள நுழைவிடத்தில் பதிவு
செய்துகொள்ள வேண்டும்.
பால்குடம் எடுக்கும் ஒவ்வொரு பக்தருடனும் ஒருவர் துணைக்குச் செல்லலாம்.
பதிவு செய்தவுடன் பக்தர்கள் கூடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு இடங்களில் அவர்கள் கோயிலுக்குள் செல்லக் காத்திருப்பர்.
கோயிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சன்னதியை வலம் வருவதற்கு முன்பு முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்படும் பால்குடம் அவர்களிடம் தரப்படும். நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பிறகு பக்தர்கள் கிளெமென்சியூ அவென்யூ வழியாக வெளியேறுவர். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 700 பேர் கோயிலுக்குள் இருக்கலாம். கோயிலுக்குச் செல்பவர்கள் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அவர்கள் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
தைப்பூச நாளன்று கோயிலுக்கு வெளியே பக்தர்கள் கூடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் விவரங்களுக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலின் இணையப்பக்கத்தைப் பக்தர்கள் நாடலாம்.

