இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளபோதிலும் அந்நாட்டின் வடமாநிலங்களில் மகர
சங்கராந்தியையொட்டி ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஒரு சில இடங்களில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
முகக்கவசம் அணியாத
பக்தர்கள் பலர் நதியை நோக்கி கூட்டங்கூட்டமாகச் சென்றதாக இந்திய ஊடகம் தெரிவித்தது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் மேலும் 264,202 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியது. கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 315 பேர் மாண்டனர்.

