தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு கல்வி அமைச்சர் பாராட்டு

தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு கல்வி அமைச்சர் பாராட்டு

3 mins read
0f411a87-9d6b-4a0d-9d22-a9052c3bf5f0
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (இடமிருந்து 2வது) பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டார். படத்தில் (இடமிருந்து) சங்கத்­தின் துணைத் தலைவர் மு.அ. மசூது, அமைச்சர் சான், சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது, குவைத் நாட்டுக்கான சிங்கப்பூர் தூதர் ஸைனுல் அபிதின் ரஷீத், 'எம்இஎஸ்' தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம். அப்துல் ஜலீல். படம்: திமத்தி டேவிட் -

பல சவால்­க­ளைக் கடக்க நேரிட்­டா­லும் சிங்­கப்­பூ­ரின் தமிழ் முஸ்­லிம்­கள் தங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த மட்­டும் உழைக்­கா­மல் ஒன்­றி­ணைந்து சமூ­கத்­தின் வளர்ச்­சிக்­காக உழைத்­துள்­ள­னர் என்­றும் கல்வி, சமூக சேவை மூலம் அடுத்த தலை­மு­றைக்­கும் வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்­ள­னர் என்­றும் கூறி­னார் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங்.

மூன்று தலை­மு­றை­க­ளுக்­கும் அதற்­கு மேலா­க­வும் சிங்­கப்­பூரை தாய்­நா­டா­கக் கருதி வேரூன்றி இருக்­கும் சிங்­கப்­பூர் தமிழ் முஸ்­லிம்­கள், மன உறுதி, மீள்­தி­றன், சேவை உணர்வை பறை­சாற்று கின்­ற­னர் என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக் (சங்­கம்) அமைப்­பின் 80ஆம் ஆண்டு சின்­னம் அறி­முக விழா மற்­றும் 'சிங்­கப்­பூர்த் தமிழ் முஸ்­லிம்­கள்' எனும் ஆங்­கில நூலின் வெளி­யீட்டு விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட அமைச்­சர் சான், தமிழ் முஸ்­லிம்­க­ளின் முக்­கிய பங்­க­ளிப்­பைப் பட்­டி­ய­லிட்டு புக­ழா­ரம் சூட்­டி­னார்.

சங்­கத்­தின் துணைத் தலை வரும் ஓய்­வு­பெற்ற தமி­ழா­சி­ரி­ய­ரு­மான திரு மு.அ. மசூது, சங்­கத்­தின் தலை­வர் திரு ராஜா முஹம்­மது ஆகிய இரு­வ­ரும் இணைந்து இந்­நூலை எழு­தி­யுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்­திற்­குத் தமிழ் முஸ்­லிம்­கள் பெரும் பங்­காற்றி உள்ளதை குறிப்பிட்டு பேசிய அமைச்­சர், நூலில் இருந்து சில உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­டி­னார்.

1946ஆம் ஆண்டில் உமறுப் புலவர் தமிழ் பள்ளியைத் தொடங்க தமிழ் முஸ்லிம்கள் தங்களின் குறைந்த வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கிய வரலாற்றையும் அவர் மெச்சினார்.

நூலுக்கு முன்­னுரை வழங்கி யுள்ள அதி­பர் ஹலிமா யாக்­கோப், கடின உழைப்பு, மீள்­தி­றன், விடா முயற்­சியை பிர­தி­ப­லிக்­கும் வர லாற்­றுக் கதை­களை ஒன்று சேர்ப்­பதே நமது மர­பு­டைமை என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

நேற்று மாலை கெங் லீ சாலை­யி­லுள்ள சுவி ஹுவெ லிம் மன்றத்தின் மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் சமூ­கத் தலை­வர்­கள், சங்க உறுப்­பி­னர்­கள், பொது­மக்­கள் உட்­பட கிட்­டத்­தட்ட 230 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மேலும் பலர் ஃபேஸ்புக் தளம் வழி­யாக நேர­லை­யில் இணைந்­த­னர்.

"ஒரு நாட்­டின் வளர்ச்­சிக்கு சிறு­பான்மை சமூ­கம் உட்­பட அனைத்து சமூ­க­மும் ஆற்­றி­யுள்ள பங்­க­ளிப்­பைப் பதிவு செய்­வ­தன் மூலமே ஒரு நாட்­டின் வர­லாற்­றைப் பூர்த்தி செய்ய முடி­யும்.

"சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்­கும் அதன் தேர்ச்­சிக்­கும் சிங்­கப்­பூர்த் தமிழ் முஸ்­லிம்­கள் பெரு­ம­ள­வில் பங்­க­ளித்­துள்­ள­னர்.

"அந்த வர­லாறு தமி­ழர்­கள் மட்­டு­மல்­லா­மல் அனைத்து சமூ­கத்­தி­ன­ரும் அறிய வேண்­டும்," என்று நூலின் இணை ஆசி­ரி­ய­ரான திரு மசூது தெரி­வித்­தார்.

இளை­யர்­களை ஈர்ப்­ப­தில் கூர்ந்து கவ­னம் செலுத்­தி­வ­ரும் சங்­கம், அடுத்த தலை­மு­றைக்­கும் தயா­ராகி வரு­வ­தா­கக் கூறி­னார் சங்­கத்­தின் தலை­வர் திரு ராஜா முஹம்­மது.

மின்­னி­லக்­கத் தளத்­தி­லும் மெய்­நி­கர் உல­கத்­தி­லும் இச்­ச­மூ­கம் துடிப்­பு­டன் செயல்­படும் என்ற அவர், முதல் படி­யாக 'மெடா­வெர்ஸ்' எனும் மெய்­நி­கர் உல­கில் நிலத்தை வாங்­கி­யுள்­ள­தா­க­வும் இச்­ச­மூ­கத்­தின் பல சமய நல்­லி­ணக்க கலா­சார மையத்தை உரு­வாக்­கக் கடப்­பாடு கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

நூல் விற்­ப­னை­யில் கிடைக்­கும் பணம் சமூக அற­நி­று­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­றும் சங்­கத்தின­ரை­யும் எழுத்­தா­ளர் ­க­ளை­யும் அணுகி நூலைப் பெற்றுக்கொள்­ள­லாம் என்­றும் சங்­கத்­தின் முன்­னாள் தலை­வ­ரான திரு நசீர் கனி தெரி­வித்­தார்.