சிங்கப்பூர் மக்கள்தொகையில் பாதிப் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

சிங்கப்பூர் மக்கள்தொகையில் பாதிப் பேர் (51 விழுக்காட்டினர்) கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், சிங்கப்பூர் அதன் தடுப்பூசித் திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகக் கூறினார்.

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள கூடுதலானோர் முன்வருவதைச் சுட்டிய அவர், “நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 42,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் பாதியில் நாள்தோறும் 25,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். அதைவிட இப்போதைய எண்ணிக்கை கணிசமாக அதிகம்,” என்றார்.

கொவிட்-19 தொற்றுக்கும் ஓமிக்ரான் திரிபு ஏற்படுத்தக்கூடிய கடும் நோய்ப் பாதிப்புக்கும் எதிராக தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பை பூஸ்டர் தடுப்பூசிகள் நிலைநாட்டுவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 956 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக சனிக்கிழமை (ஜனவரி 15) இரவு சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டது.

புதிதாக ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 692ஆக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!