2023 தொடக்கத்தில் ஜிஎஸ்டி உயர்வு: வல்லுநர்கள் கணிப்பு

2023 தொடக்கத்தில் ஜிஎஸ்டி உயர்வு: வல்லுநர்கள் கணிப்பு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு அடுத்த ஆண்டுத் தொடக்­கத்­தில் இருந்து நடை­மு­றைக்கு வர­லாம் என்று பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இப்­போது 7 விழுக்­கா­டாக இருக்­கும் ஜிஎஸ்டி 9 விழுக்­கா­டாக உயர்த்­தப்­படும் என்று 2018ஆம் ஆண்­டில் முதன்­மு­த­லில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அறி­வித்­தது. இத­னை­ய­டுத்து, இவ்­வாண்டு ஜூலை 1ஆம் தேதி­யில் இருந்து அந்த அறி­விப்பு நடை­மு­றைக்கு வரக்­கூ­டும் எனச் சொல்­லப்­பட்­டது.

இருப்­பி­னும், இப்­போது நில­வும் உல­க­ளா­விய பண­வீக்க நெருக்­க­டி­யா­லும் ஏற்ற இறக்­க­மாக இருக்­கும் பொரு­ளி­யல் மீட்­சி­யா­லும், 2023 ஜன­வரி 1ஆம் தேதி­யில் இருந்துதான் ஜிஎஸ்டி உயர்வு நடை­மு­றைக்கு வரக்­கூ­டும் என்று பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் சிலர் கணித்­துள்­ள­னர்.

அப்­படி ஜிஎஸ்டி உயர்வை ஆறு மாதங்­களுக்கு தள்­ளிப்­போ­டு­வது, போதிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள தொழில்­து­றை­யி­ன­ருக்­கும் பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கும் சற்­றுக் கூடு­தல் கால அவ­கா­சம் அளிக்­கும் என்று ஓசி­பிசி வங்­கி­யின் கரு­வூல ஆய்வு, உத்­திப் பிரி­வின் தலை­வர் செலினா லிங் கூறி­னார்.

2007ஆம் ஆண்­டில் ஜிஎஸ்டி 5 விழுக்­காட்­டில் இருந்து 7 விழுக்­கா­டாக உயர்த்­தப்­பட்­டது. அது­கு­றித்த அறி­விப்பு அவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் வரவு­செ­ல­வுத் திட்ட அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட்­ட­போது வெளி­யா­னது. அதன்­பின் ஐந்து மாதங்­கள் கழித்து, அதா­வது 2007 ஜூலை­யில் அந்த உயர்வு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

வரி நிபு­ணர்­கள் பல­ரும் அடுத்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்தே ஜிஎஸ்டி உயர்வு நடை­மு­றைக்கு வரும் என எதிர்­பார்க்­கின்­ற­னர்.

அண்­மை­யில், ஜிஎஸ்டி உயர்வை நிரந்­த­ர­மாகத் தள்­ளி­வைக்க இய­லாது என்­றும் வேண்­டு­மா­னால் அது ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்­தைத் தள்­ளிப்­போ­ட­லாம் என்­றும் நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்து இருந்­தார்.