மெய்நிகர் கண்காணிப்பில் 'ஏஆர்டி'

மெய்நிகர் கண்காணிப்பில் 'ஏஆர்டி'

2 mins read

மேற்பார்வையின்கீழ் கொவிட்-19 சுயபரிசோதனை செய்வோருக்கான முன்னோட்டத் திட்டம்

மேற்­பார்­வை­யின்­கீழ் சுய­மாக கொவிட்-19 ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை (ஏஆர்டி) செய்­து­கொள்ள வேண்­டி­யி­ருப்­போர், இனி தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்­கு­நர் ஒரு­வர் காணொளி வழி­யா­கக் கண்­கா­ணித்­த­படி இருக்க, அத­னைச் செய்­து­கொள்­ள­லாம். பரி­சோ­தனை முடி­வு­கள் கிட்­டத்­தட்ட நான்கு மணி நேரத்­தில் குறுஞ்­செய்தி மற்­றும் மின்­னஞ்­சல் வாயி­லாக அனுப்பி வைக்­கப்­படும்.

இப்­படி, நிகழ்­நே­ரத்­தில் மெய்­நி­கர் மேற்­பார்­வை­யின்­கீழ் 'ஏஆர்டி' சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் சாத்­தி­யக்­கூ­று­களை மதிப்­பிடும் முன்­னோட்­டத் திட்­டம் இடம்­பெற்று வரு­வ­தா­கச் சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது.

கொவிட்-19 தொற்­று­டன் வாழ சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­கிறது. இப்­போது நேர­டிப் பரி­சோ­தனை மையங்­க­ளுக்­குச் சென்று 'ஏஆர்டி' பரி­சோ­தனை செய்­து­கொள்ள முடி­கிறது.

இந்­நி­லை­யில், அவ்­வப்­போது சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்ள ஏது­வாக, அதற்­கான தெரி­வு­களை விரி­வு­ப­டுத்­து­வது குறித்து அமைச்சு ஆராய்ந்து வரு­கிறது.

'எவ்­வி­டத்­தி­லும் மருத்­து­வர் (டாக்­டர் எனி­வேர்)' எனும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னம் இந்த முன்­னோட்­டத் திட்­டத்­தில் பங்­கு­கொள்­கிறது. இந்­நி­று­வ­னம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தனது தொலை­வழி 'ஏஆர்டி' சேவையை அறி­முகப்­ப­டுத்­தி­யது.

தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதை (விடி­எல்) திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூர் வரு­வோ­ர், தரையிறங்கியபின் 3வது. 7வது நாள்களில் மேற்பார்வையின்கீழ் சுயபரிசோதனை செய்துகொள்ள இத்திட்டம் வசதியாக இருக்கும்.

காணொ­ளிக் கண்­கா­ணிப்­பின்­கீழ் சுய­ப­ரி­சோ­தனை செய்ய விரும்­பும் ஒரு­வர், முத­லில் 'டாக்­டர் எனி­வேர்' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்ய வேண்­டும். இச்­சே­வைக்கு $12.84 கட்­ட­ணம் வசூ­லிக்கப்படும்.

இந்த 30 நிமிட மருத்­துவ ஆலோ­ச­னை­யின்­போது, சுய­ப­ரி­சோ­தனை மேற்­கொள்­ப­வர் தமது காணொ­ளிக் கரு­வி­யைச் செயல்­பாட்டு நிலை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும். ஒரு­வர் சுய­ப­ரி­சோ­த­னை­யைத் தொடங்­கு­முன், 'ஏஆர்டி' பரி­சோ­த­னைத் தொகுப்­பில் உள்ள அனைத்­தும் திறக்­கப்­ப­டாத நிலை­யில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­படு­வார். மூக்­குத் துளை­யி­னுள் 2.5 சென்டிமீட்டர் அள­விற்கு பரி­சோ­த­னைக் குச்சியைச் செலுத்த வேண்டும்.