கூடுதல் பக்தர்கள் கூடி சிறப்பித்த திருவிழா

கூடுதல் பக்தர்கள் கூடி சிறப்பித்த திருவிழா

3 mins read
503ec8f0-862f-4eb1-8b91-c1e80dac26a1
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று பால்குடம் எடுத்தார். படம்: திமத்தி டேவிட் -

தைப்­பூ­சத்­தி­ரு­விழா, கடந்­தாண்­டைப்­போல இந்த ஆண்­டும் கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு எதி­ரான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளு­டன் அமை­தி­யாக நடந்­தே­றி­யது. தேங் ரோடு தெண்­டா­யு­த­பாணி கோவி­லுக்கு திங்­கள் நள்­ளி­ரவு தொடங்கி நேற்று இரவு 10 மணி வரை வரத்­தொ­டங்­கிய பக்­தர்­கள் பால்­கு­டம் ஏந்தி முரு­கக்­க­ட­வு­ளுக்கு நேர்த்­திக்கடன் செலுத்தி­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருப்­ப­தால், அலகு குத்­து­த­லும் வழக்­க­மாக ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் ஆல­யத்­தி­லி­ருந்து தொடங்­கும் பாத ஊர்­வ­ல­மும் இரண்­டா­வது ஆண்­டாக அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

தைப்­பூ­சத் திரு­நா­ளான நேற்­றுக் காலை 8 மணி அள­வில் ஸ்ரீதெண்டாயுதபாணி கோயி­லுக்­குச் சிறப்பு வருகை அளித்த துணைப்­பி­ர­த­மர் ஹெங் சுவீ கியட் பால்­கு­டம் ஏந்­திச் சென்று கோயி­லின் சந்­நி­தி­யில் சமர்ப்­பித்­தார்.

பிறகு அங்கிருந்த தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் பொது­மக்­க­ளை­யும் சந்­தித்து அவர் பேசி­னார்.

பின்­னர் நேற்று பிற்­ப­க­லில் இது­பற்றி தமது ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்ட திரு ஹெங், "இன்று காலை நான் பக்­தர்­க­ளு­டன் சேர்ந்து பால் குடம் ஏந்­தி­னேன்.

"பக்­தர்­கள் இந்­தக் கோயி­லுக்­குச் சென்று நன்றி கூறி, ஆசீர்­வா­தம் பெற்று முரு­கப் பெரு­மா­னுக்­கான தங்­க­ளது வேண்­டு­தலை நிறை­வேற்­று­வர். தேவை­யான பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றியே இவை நடத்­தப்­

ப­டு­கின்­றன," என்று குறிப்­பிட்­டார்.

"நான் சந்­தித்த சில பக்­தர்­கள், கிரு­மிப்­ப­ர­வல் தொடர்­பி­லான தங்­க­ளது அனு­ப­வங்­களை என்­னு­டன் பகிர்ந்­த­னர். இத்­தி­ரு­வி­ழா­வில் பல்­வேறு இன, சம­யத்­தி­னர் உதவி செய்­த­தைக் கண்டு மகிழ்ந்­தேன். இது நம் பல இன, கலா­சார சமூ­கத்­தின் பிர­தி­ப­லிப்பு," என்­றும் திரு ஹெங் தெரி­வித்து உள்­ளார்.

இதற்­கி­டையே, பால்­கு­டம் எடுக்க சுமார் 7,500 பக்­தர்­கள் பதி­வு­செய்ய அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் தலை­வர் திரு சேக்­கப்­பன் சுவா­மி­நா­தன், 68, கூறி­னார். நேற்று இரவு 9 மணியளவில் 7,100 பக்தர்கள் பால்குடம் எடுத்ததாகவும் சுமார் 5,100 பொது பக்தர்கள் தரிசனம் செய்த தாகவும் கோயில் நிர்வாகம் கூறியது.

"பால் குடம் எடுக்­கும் பக்­தர்­க­ளைத் தவிர்த்து மேலும் ஏராளமான பக்­தர்­கள் இன்­றைய தைப்­பூ­சத்­தன்று கோயி­லுக்கு வரு­வார்­கள் என எதிர்­பார்க்­கி­றோம். அன்­ன­

தா­னத்­திற்­காக 15,000 உண­வுப்­பொட்­ட­லங்­கள் வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார் திரு சுவா­மி­நா­தன்.

கடந்த ஆண்டு சுமார் 5,000 பக்­தர்­கள் பால்­கு­டம் ஏந்­திச் சென்று நேர்த்­திக்­க­டன் நிறை­வேற்­றி­ய­தா­கக் குறிப்­பிட்ட அவர், அப்­போது பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­தப்­பட்­ட­தால் இவ்­வாண்டு கூடு­தல் பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

கொவிட்-19க்கு முந்­திய காலகட்­டத்­தில் பால்­குட பக்­தர்­க­ளின் எண்­ணிக்கை 12,000 ஆக இருந்­தது. 2021 தைப்­பூ­சத்­திற்­கும் இவ்­வாண்டு தைப்­பூ­சத்­திற்­கும் அதிக வேறு­பாடு­ கள் இல்லை என்­றா­லும் தற்போது அதி­கக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருப்­ப­தாக திரு சுவா­மி­நா­தன் குறிப்­பிட்­டார்.

"இம்­முறை பக்­தர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்­க­வேண்­டும். தொண்­டூ­ழி­யர்­கள் இங்கு வரு­வ­தற்கு இரண்டு மணி நேரத்­திற்கு முன்­ன­தாக சோதனை செய்­யப்­ப­ட­வேண்­டும். ஒவ்­வொரு மணி நேர­மும் கோயில் வளா­கத்­தில் சுத்­தி­க­ரிப்­பு செய்ய வேண்டும்," என்று அவர் பட்டியலிட்டார்.

பால்­குட பக்­தர்­கள் ஐந்து பேர் கொண்­டுள்ள குழுக்­க­ளாக செல்­ல­லாம் என்று ஆரம்­பத்­தில் விதிக்­கப்­பட்ட நிபந்­தனை இறு­தி­யில் மாற்­றப்­பட்­டது. பால்­கு­டம் சுமக்­கும் ஒரு பக்­த­ருக்­குத் துணை­யாக ஒரு­வர் மட்­டும் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டது. கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த இந்த மாற்­றம் செய்­யப்­பட்­ட­தாக கோயில் நிர்­வா­கத்­தி­னர் கூறி­னர்.