தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'விடிஎல்' பயணிகளுக்கு 'ஏஆர்டி' எளிதாகிறது

1 mins read

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை (விடி­எல்) வழி­யாக சிங்­கப்­பூர் வரு­வோர், இனி வீட்­டை­விட்டு வெளி­யில் செல்லும் நாள்களில் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்­து­கொண்­டால் போது­ம்.

அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் தங்­க­ளது கைப்­பேசி எண்­ணுக்கு அனுப்­பப்­படும் இணைப்பு வழி­யாக 'ஏஆர்டி' பரி­சோ­தனை முடி­வு­களை அனுப்பி வைக்­க­வும் தேவை­யில்லை.

அத்­து­டன், அவர்கள் இங்கு வந்­தி­றங்­கியபின் 3ஆம், 7ஆம் நாள்­களில் விரை­வுப் பரி­சோ­தனை மையங்­க­ளுக்­குச் சென்று, மேற்­பார்­வை­யின்­கீழ் பரிசோதனை செய்து கொள்ளவும் தேவையில்லை.

நாளை மறுநாள் 24ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து இந்த மாற்றங்கள் நடப்பிற்கு வரவுள்ளன.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது இதனை அறி­வித்­தது.

இத­னை­ய­டுத்து, கடந்த டிசம்­பர் 6ஆம் தேதிமு­தல் நடப்­பிலிருந்­து­வரும் 'விடி­எல்' பய­ணி­க­ளுக்­கான அன்­றா­டப் பரி­சோ­தனை முறை ஒரு முடி­வுக்கு வரு­கிறது. இந்­தப் பரி­சோ­தனை முறை­ மூ­லமாக இது­நாள்­வரை 700க்கும் மேற்­பட்­டோ­ரி­டம் ஓமிக்­ரான் தொற்று கண்­ட­றி­யப்­பட்டுள்­ளது.

சாங்கி விமான நிலை­யத்­திற்கு பய­ணி­கள் வந்­தி­றங்­கி­ய­தும் கட்­டா­ய­மாக 'பிசி­ஆர்' பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் நடை­முறை நீடிக்­கும். ஜோகூ­ரிலிருந்து கடற்­பாலம் வழி­யாக சிங்­கப்­பூர் வந்­த­தும் 'ஏஆர்டி' பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் நடை­மு­றை­யும் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும்.