தமிழகத்தில் புதிதாக 30,000 பேர் பாதிப்பு எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏறுமுகம்

தமிழகத்தில் புதிதாக 30,000 பேர் பாதிப்பு எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏறுமுகம்

2 mins read

தமி­ழ­கத்­தில் ஒரே நாளில் 30,744 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. தமிழ்­நாட்­டின் 38 மாவட்­டங்­களில் 30 மாவட்­டங்­களில் புதி­தாக பதி­வா­கி­யுள்ள கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­ரித்­துள்­ளன. 238 நாள்­க­ளுக்­குப் பிறகு, தமி­ழ­கத்­தில் பதி­வான அன்­றாட கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை, 30,000ஐ தாண்­டி­ய­போ­தும் தொற்று விகி­தம் மெது­வ­டை­யத் தொடங்­கி­யுள்­ளது.

மூன்­றா­வது கிருமி அலை­யில் சிக்­கிய நிலை­யில், ஜன­வரி 19ஆம் தேதி­யன்று 26,981 புதிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் தமி­ழ­கத்­தில் பதி­வா­கின. இது அதற்கு முந்­தைய நாள் பதி­வான சம்­ப­வங்­க­ளைக் காட்­டி­லும் 3,000 அதி­கம்.

இருப்­பி­னும், ஜன­வரி 20ஆம் தேதி­யன்று தமி­ழ­கத்­தில் 28,561 புதிய சம்­ப­வங்­கள் பதி­வா­கி­ய­தில் தொற்று விகி­தம் மெது­வ­டைந்­திருந்­தது.

வெள்­ளிக்­கி­ழமை பதி­வான புதிய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைக் காட்­டி­லும் சனிக்­கி­ழ­மை­யன்று 874 கூடு­தல் சம்­ப­வங்­கள், அதா­வது 29,870 பேருக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் ஒரு­வ­ரால் ஏற்­ப­டக்­கூ­டிய புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களும் இறங்­கு­மு­க­மா­கி­யுள்­ளன. தொற்று நோய் தொடர்­பில் இது முக்­கி­ய­மான ஓர் அம்­ச­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு டிசம்­பர் 25ஆம் தேதி­யன்று தமி­ழ­கத்­தில் 606 புதிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

இதன்­படி கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர், பிற­ருக்­குக் கிரு­மித்­தொற்­றைப் பரப்­பும் சரா­சரி எண்­ணிக்கை 1.4ஆக இருந்­தது.

இதை­ய­டுத்து டிசம்­பர் 31ஆம் தேதிக்­குள் தொற்­றுச் சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை 1,155ஐ எட்­டி­யது. அப்­போது இந்த எண்­ணிக்கை 3.35ஆக உயர்ந்­தது.

புத்­தாண்டு தினத்­தன்று 3.46ஆகப் பதி­வா­னது. இவ்­வாறு 3க்கு மேல் பதி­வா­கி­னால் கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிக்­கப்­படும் ஒவ்­வொ­ரு­வ­ரும் மேலும் மூன்று பேருக்­குக் கிரு­மி­யைப் பரப்­பு­வர் என்­பதே நிபு­ணர்­க­ளின் கணிப்பு.

ஆனால், தற்­போது தமி­ழ­கத்­தில் இந்த எண்­ணிக்கை 1.26க்குக் குறைந்­துள்­ளது.

இருப்­பி­னும், விழிப்­பு­நி­லை­யில் இருப்­பதே சிறந்­தது என்­கின்­ற­னர் சுகா­தார அதி­கா­ரி­கள். 2021ஆம் ஆண்­டில் இரண்­டா­வது அலை­யின் உச்­சத்­தில் தின­மும் 30,000 முதல் 36,000 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் தின­மும் பதி­வா­கின.

இது இரண்டு வாரங்­க­ளுக்கு மேல் நீடித்­தது.

"மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 நோயாளி­களின் எண்­ணிக்கை தற்­போது குறைந்­துள்­ளது. அத்­து­டன் உயிர்­வாயு, மருந்து ஆகி­ய­வற்­றுக்­குத் தட்­டுப்­பா­டும் இல்லை," என்று சுகா­தார அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

மருத்­து­வப் பயன்­பாட்­டுக்­கும் இதர பயன்­பாட்­டுக்­கும் தற்­போது தேவைப்­படும் பிரா­ண­வாயு அளவு, கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கிட்­டத்­தட்ட 75% குறைந்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­பது இதற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.