மூன்று அம்சங்கள் முக்கியம்

மூன்று அம்சங்கள் முக்கியம்

2 mins read

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மிப் பர­வலை சிங்­கப்­பூர் கையா­ளும் வேளை­யில் நிலை­மை­யைக் கணிக்க சுகா­தார அமைச்சு மூன்று அம்­சங்­க­ளைக் கருத்தில்­கொள்­ளும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் அவ­சர சிகிச்சை பிரி­வு­களின் படுகை எண்ணிக்கை, மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­படும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை, ஓமிக்­ரான் வகை கிருமி சிங்­கப்­பூ­ரின் மனித­வ­ளத்­திற்கு ஏற்­ப­டுத்­தும் பாதிப்பு ஆகி­யவை அந்த மூன்று அம்­சங்­கள்.

அவ­சர சிகிச்சைப் பிரி­வில் சேர்க்கப்­பட்­டுள்­ளோ­ரின் எண்­ணிக்கை கடந்த வார இறு­தி­யில் 13லிருந்து ஒன்­ப­துக்­குக் குறைந்­தது என்று திரு ஓங் சொன்­னார்.

ஓமிக்­ரான் வகை கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ரில் இரு­வர் அவ­சர சிகிச்சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

எனினும், அவர்களுக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படவில்லை.

"அவ­சர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நிலையாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்று புதிய ஊட்­ரம் சமூக மருத்­து­வ­ம­னை­யின் திறப்பு விழா­வில் பேசிய திரு ஓங் குறிப்­பிட்­டார்.

ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ரில் சுமார் 1.3 விழுக்­காட்­டி­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் 0.3 விழுக்­காட்­டி­ன­ருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதாகவும் திரு ஓங் கூறி­னார்.

எனி­னும், அத்­த­கைய நோயா­ளி­க­ளுக்­குப் பொது­வாக அதிக நாள்­க­ளுக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்­படுவதில்லை என்­றும் அவர் சொன்­னார். அதி­க­பட்­ச­மாக ஐந்து நாள்­க­ளுக்கு மட்­டுமே அத்­த­கை­யோ­ருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"கிரு­மித்தொற்றுச் சம்­ப­வங்­கள் எண்­ணிக்கை, விழுக்­கா­டு­கள் ஆகிய இரண்­டின் ரீதி­யா­கப் பார்த்­தா­லும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன," என்று திரு ஓங் குறிப்­பிட்­டார். "நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 0.1 விழுக்­காடு அதி­க­ரித்­தா­லும் கூடு­த­லா­க பல படுக்­கை­கள் தேவைப்படுகின்றன," என்று அவர் சுட்­டி­னார்.

மூன்றாவது மனிதவளத்திற்கு ஏற்படும் பாதிப்பு. இது குறித்தே தாம் அதிகம் கவலைப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

"மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­கள் நிறை­வது பிரச்­சி­னை­யல்ல. கிரு­மித்­தொற்று அல்­லது தொற்­றி­யோ­ரு­டன் நெருங்­கிய தொடர்பு கார­ண­மாக மனி­த­வ­ளம் தனி­மைப்­ப­டுத்­தப் படு­வதே பிரச்­சினை," என்று திரு ஓங் கூறி­னார். கடந்த ஈராண்டுகளாக அயராது உழைத்த சுகாதார ஊழியர்களுக்கு அமைச்சர் ஓங் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

புதிய ஊட்­ரம் சமூக மருத்­து­வ­மனை திறப்பு - பக்­கம் 2ல்.

ஓமிக்ரான் அலை குறித்து அமைச்சர் ஓங் விளக்கம்