தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல்

1 mins read
c2f55b68-eaf4-4950-a2ef-9e05530ab341
பிரிவினைவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் நரதிவாட் மாநிலத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்தனர். அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் இருவரும் மாண்டனர். மாண்டவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் காத்துக்கொண்டிருந்தனர். படம்: ஏஎஃப்பி -

தென்­தாய்­லாந்­தின் யாலா நக­ரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு நிகழ்ந்த 13 குண்­டு­வெ­டிப்­பு­கள் கார­ண­மாகக் குறைந்­தது ஒரு­வர் காய­ம­டைந்­தார்.

மளி­கைக் கடை­க­ளுக்கு வெளியில் உள்ள சாலை­யோ­ரங்­

க­ளி­லும் கடை­க­ளி­லும் சந்­தை­

யி­லும் விலங்­கி­யல் மருத்­து­வ­ம­னை­யி­லும் கார் பழு­து­பார்ப்­புப்

பட்­ட­றை­யி­லும் வெடி­குண்­டு­கள் வெடித்­த­தாக தாய்­லாந்­துக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

குறைந்­தது மூன்று வெடி

­குண்­டு­கள் வெடிக்­காத நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

குண்­டு­வெ­டிப்­பு­கள் பெரிய அள­வில் இல்லை என்­றும் சேதம், மர­ணம் விளை­விப்­ப­தற்­குப் பதி­லாக அச்­சு­றுத்­த­வும் அமை­தி­யைச் சீர்­கு­லைக்­க­வும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக கால்­துறை உயர் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

தாக்­கு­த­லுக்கு இது­வரை யாரும் பொறுப்­பேற்­க­வில்லை.

தென்­தாய்­லாந்­தில் 2004ஆம் ஆண்­டி­லி­ருந்து ராணு­வத்­துக்­கும் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்­கும் இடை­யி­லான மோதல் கார­ண­மாக 7,300க்கும் அதி­க­மா­னோர் உயிர்­இழந்­து­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, தாய்­லாந்­தின் நர­தி­வாட் மாநி­லத்­தில் பிரி­வி­னை­வா­தி­கள் எனச் சந்­தே­கிக்­கப்­படும் இரு­வரை அதி­கா­ரி­கள் சுட்­டுக்­கொன்றனர்.

கடந்த ஆண்டு நடத்­தப்­பட்ட வெடி­குண்டு தாக்­கு­தல்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட இரு­வர் அங்­குள்ள வீட்­டில் பதுங்­கி­யி­ருப்­ப­தா­கத் தக­வல் கிடைத்­த­தும் ராணுவ அதி­கா­ரி­களும் காவல்­து­றை­யி­ன­ரும் அந்த வீட்டை சுற்­றி­வ­ளைத்­த­னர்.

வீட்­டிற்­குள் இருந்த இரு­வ­ரும் சர­ண­டைய மறுத்­ததை அடுத்து, அதி­கா­ரி­கள் அதி­ர­டி­யாக உள்ளே நுழைந்­த­னர்.

இதில் தொண்­டூ­ழி­யப் படை­யைச் சேர்ந்த ஒரு­வர் காய­முற்­றார். சந்­தே­கப் பேர்­வ­ழி­கள் இரு­வ­ரும்

சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.