பொருளியல் மீட்சி: பிரதமர் லீ நம்பிக்கை

பொருளியல் மீட்சி: பிரதமர் லீ நம்பிக்கை

2 mins read
895e5631-c827-4400-81da-689f42f89669
பிரதமர் லீ சியன் லூங், ஜூரோங் பாயிண்ட் கடைத் தொகுதிக்கு வெளியே நேற்று என்டியுசி பிரமுகர் களுடன், சுபைமி சுபோ, 43, என்ற உணவு விநியோக ஊழியருக்கு நன்றி கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புத்தாண்டுக் கொண்டாட்ட காலத்திலும் அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்களைச் சந்தித்து பிரதமர் நன்றி கூறினார்

உல­கம் முழு­வ­தும் இப்­போது நில­வும் ஓமிக்­ரான் தொற்று கார­ண­மாக பொரு­ளி­ய­லைப் பொறுத்­த­வரை நிச்­ச­ய­மில்­லாத நிலை தொடர்ந்து நில­வு­கிறது.

இந்­தச் சூழ­லில் இந்த ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்சி பற்றி எச்­ச­ரிக்­கை­யு­டன் கூடிய நம்­பிக்­கையைத் தான் கொண்­டி­ருப்­ப­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சீனப் புத்­தாண்­டின் முந்திய நாளான நேற்று ஜூரோங் பாயிண்ட் கடைத்­தொ­கு­திக்குப் பிர­த­மர் லீ சென்­றி­ருந்­தார். அப்­போது அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அமெ­ரிக்கப் பொரு­ளி­யல் வலு வாக வளர்ச்சி கண்டு வரு­வ­தை அவர் சுட்டினார். அதேபோல் ஓமிக்­ரான் தொற்று அதி­கம் இருந்­தா­லும் ஐரோப்­பா­வும் வளர்ந்து வரு­வதை அவர் எடுத்துக் கூறினார்.

வளர்ந்த நாடு­களில் வேக­மாக பர­விய ஓமிக்­ரான் தொற்று அதே வேகத்­தில் குறைந்து வரு­வ­தா­கத் தெரி­கிறது என்று தெரிவித்த திரு லீ, இதன் விளை­வாக அதிக பாதிப்பு இல்­லா­மல் பொரு­ளி­யல் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று நம்­ப­லாம் என்றார்.

சீனா­வில் என்ன நிக­ழும் என்­பது இன்­ன­மும் தெரி­யாத சூழல் இருக்­கிறது என்­ப­தை­யும் திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆகை­யால் அதை அணுக்­க­மாக நாம் கண்­கா­ணித்து வர­வேண்­டும் என்­றார் அவர். தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் சிங்­கப்­பூ­ரின் பக்­கத்து நாடு­களும் நல்ல நிலைக்­குத் திரும்பி வரு­கின்­றன என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

கட்­டம் கட்­ட­மாக எல்­லை­கள் திறக்­கப்­படும் சூழ­லில் இந்த வட்­டா­ரத்­துக்­குள் தொழில்­களும் பய­ண­மும் மீண்­டும் சூடு­பி­டிக்­கும் என்று தான் நம்­பு­வ­தாகவும் திரு லீ தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூரை பொறுத்­த­வரை, சில துறை­கள் குறிப்­பாக உணவு, பானம், சுற்­றுலா, பொழு­து­போக்கு துறை­கள் இன்­ன­மும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றன.

"இருந்­தா­லும் இந்த ஆண்­டில் பொரு­ளி­யல் 3% முதல் 5% வரை வள­ரும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு இருக்­கிறது. எல்­லா­வற்­றை­யும் வைத்துப் பார்க்­கை­யில் மொத்­தத்­தில் நமக்கு எல்­லாம் அனு­கூ­ல­மாக இருக்­கும் என்றே தெரி­கிறது," என்­றார் திரு லீ.

"சிங்­கப்­பூர் வளர்ச்­சி­யின் உத்­வே­கம் வலு­வாக இருந்து வரு­கிறது. உற்­பத்தி, நிதி சேவை­களும் இதர துறை­களும் நன்றாக செயல்­பட்டு வரு­கின்­றன.

"சென்ற ஆண்­டை­விட இந்த ஆண்டு சிறந்த ஆண்­டாக இருக்­கும் என்று நம்­பு­கி­றேன். முயற்சி­களை நாம் கைவிட்­டு­விடக் கூடாது. அதே­வே­ளை­யில், அள­வுக்கு அதிக அவ­நம்­பிக்­கை­யும் தேவை­யில்லை," என்­றாரவர்.

சீனப் புத்­தாண்டு காலத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­களை வழங்­கும் உணவு விநி­யோக ஊழி­யர்­கள், டாக்சி ஓட்­டு­நர்­கள், கடைத்­தொ­குதி ஊழி­யர்­களுக்கு பிரதமர் திரு லீ நன்றி கூறி­னார்.