கூடுதல் ஆதரவு; கடன்கள் குறைந்தன

கூடுதல் ஆதரவு; கடன்கள் குறைந்தன

3 mins read

உற்­பத்­தித்­தி­றன், திறன் மேம்­பாடு ஆகி­ய­வற்­றுக்­கா­கக் கடந்த ஆண்­டில் கூடு­தல் நிறு­வ­னங்­கள் என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் ஆத­ரவை நாடின. கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தொடர்­பான கடன்­க­ளைப் பெறும் நிறு­வ­னங்­

க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்ள­ போ­தி­லும் இந்­நிலை ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யைச் சமா­ளிக்க நிறு­வ­னங்

­க­ளுக்கு அர­சாங்­கம் தொடர்ந்து உத­வும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­தார். அதே சம­யம் உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் இருக்­கும் வாய்ப்­பு­களை அவை பயன்­டுத்­திக்­கொள்ள உதவ வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

கடந்த இரண்டு ஆண்­டு­

க­ளாக ஏற்­பட்ட பின்­ன­டைவை ஈடு­செய்ய என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் அனைத்­து­ல­க­ ம­ய­மாக்­கல் முயற்­சி­கள் தீவி­ரப்

­ப­டுத்­தப்­படும் என்று அமைச்­சர் கான் கூறி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தொடர்­பான கடன் திட்­டங்­க­ளின்­கீழ் கடந்த ஆண்டு 12,600 நிறு­

வ­னங்­க­ளுக்கு $8.6 பில்­லி­யன் கடன் வழங்க என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்­தது.

2020ஆம் ஆண்­டில் 21,000 நிறு­வ­னங்­க­ளுக்கு $18 பில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள கடன்­கள் வழங்­கப்­பட்­டன.

ஆக அதிக ஆத­ரவு பெற்ற துறை­களில் மொத்த வர்த்­த­கம், கட்­டு­மா­னம், உற்­பத்தி, நிபு­ணத்­து­வச் சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம் ஆகி­யவை அடங்­கும். சிறிய வர்த்­த­கங்­க­ளுக்கு ஆக அதி­க­மான உதவி கிடைத்­தது. கடந்த ஆண்டு மேலும் பல துறை­கள் மீண்டு வந்­ததை அடுத்து, ஆணை பெற்ற கழ­க­மான என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் உதவி தேவைப்­படும் நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை குறைந்­து­இருப்­ப­தாக அதன் தலைமை நிர்­வாகி பிங் சியோங் பூன் கூறி­னார்.

சில கடன்­கள் பல ஆண்­டு­

க­ளுக்கு வழங்­கப்­படும் என்­ப­தால் 2020ஆம் ஆண்­டில் நிதி உதவி பெற்ற சில நிறு­வ­னங்­க­ளுக்கு இவ்­வாண்டு கடன் கேட்டு மீண்­டும் விண்­ணப்­பிக்­கும் தேவை இல்­லா­மல் போன­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 நெருக்­க­டி

­நி­லைக்கு முன்பு வழங்­கப்­பட்ட கடன்­க­ளை­விட கடந்த ஆண்­டில் கூடு­தல் கடன்­கள் வழங்­கப்­பட்­ட­தாக திரு பிங் கூறி­னார்.

கடந்த ஆண்டு, ஒட்­டு­மொத்த அடிப்­ப­டை­யில், வர்த்­த­கம் உருமாறவும் வளர்ச்சி அடை­ய­வும் 22,100 நிறு­வ­னங்­க­ளுக்கு என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு ஆத­ரவு வழங்­கி­யது.

கடந்த ஆண்டு புத்­தாக்­கம் தொடர்­பான திட்­டங்­களை 600 நிறு­வ­னங்­கள் தொடங்­கின. 2020ஆம் ஆண்­டி­லும் 600 நிறு­

வ­னங்­கள் இத்­திட்­டங்­களில் ஈடு­ப­டத் தொடங்­கின. 2019ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 550ஆக பதி­வா­னது.

கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்­பி­ருந்த நிலை­யைப் போல அனைத்­து­ல­க­ம­ய­மாக்­கல் திட்­டங்­களில் ஈடு­படும் நிறு­

வ­னங்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு தொடர்ந்து குறை­வாக இருந்தது.

2019ஆம் ஆண்­டில் 2,600 நிறு­வ­னங்­கள் அனைத்­து­ல­க­

ம­ய­மாக்­கல் முயற்­சி­யில் ஈடுட்­டன.

இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு சரிவு கண்­டது. கடந்த ஆண்டு அனைத்­து­ல­க­ம­ய­மாக்­கல் முயற்­சி­யில் மொத்­தம் 1,600 நிறு­

வ­னங்­கள் ஈடு­பட்­டன.

இழந்த வாய்ப்­பு­களை மீண்­டும் பெற சிங்­கப்­பூர் வர்த்­த­கங்­கள் தீவி­ர­மா­கச் செயல்­பட வேண்­டும் என்று அமைச்­சர் கான் கூறி­னார்.

"நம்­மைத் தயார்ப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் உல­கப் பொரு­ளி­யல் மீட்சி அடை­யும்­போது நம்­மால் உடனே வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும்," என்­றார் திரு கான். அனைத்­து­ல­க­ம­ய­மாக்­கல் சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்குத் தொடர்ந்து முக்­கி­ய­மாக இருப்­ப­தால் அதைத் தீவி­ரப்­ப­டுத்­தும் முயற்­சி­கள் முடுக்கி­வி­டப்­படும் என்று என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் தலை­வர் பீட்­டர் ஓங் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 நெருக்­கடி

நிலைக்கு முன்பு இருந்த உல­க­ளா­விய வளர்ச்சி திரும்­பும்­போது உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்குப் பல நல்ல வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரும். நமது நிறு­வ­னங்­கள் அளிக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­க­ளுக்கு ஏற்­றாற்­போல் நிறுவனங்களுடனான ஈடுபாட்டு நடவடிக்கைகளை நாம் சரி­செய்ய வேண்­டும்," என்­றார் திரு ஓங். உதா­ர­ணத்­துக்கு, வெளி­நா­டு­களில் வர்த்­த­கம் செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு அவற்­றின் சந்­தைப்­ப­டுத்­து­தல் உத்­தி­கள் தொடர்­பாக அமைப்பு உதவி செய்­யும். பிர­தான நக­ரங்­க­ளுக்கு அப்­பால் மற்ற இடங்­க­ளி­லும் வர்த்­த­கம் செய்ய நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­படும்.

வாய்ப்­பு­க­ளைப் பொறுத்து, புதிய இடங்­களில் வர்த்­த­கம் செய்ய நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­படும்.

தென்­அ­மெ­ரிக்கா, ஆப்­பி­ரிக்கா ஆகி­ய­வற்­றில் உள்ள மின்­னி­லக்க, உள்­கட்­ட­மைப்­புத் தீர்வு சந்­தை­

க­ளி­லும் அமெ­ரிக்கா, ஐரோப்பா ஆகி­ய­வற்­றில் உள்ள பசு­மைப் பொரு­ளி­யல், தள­வா­டத் துறை சந்­தை­க­ளி­லும் நுழைய உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­படும். புத்­தாக்­கத்­துக்­கும் புதிய நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சிக்­கும் முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்­றார் திரு ஓங். நிதி உதவி பெற 2,300 புதிய தொழில்­நுட்ப நிறு­

வ­னங்­க­ளுக்கு அமைப்பு கடந்த ஆண்டு உத­வி­ய­தாக திரு ஓங் கூறினார்.