புதிய நோய்த் தடுப்புப் பராமரிப்புத் திட்டம்

2 mins read

அதி­க­ரித்­து­வ­ரும் சுகா­தா­ரச் செலவு­க­ளைச் சமா­ளிக்­க­வும் நோயா­ளி­க­ளின் குடும்­பங்­கள் எதிர்­நோக்கும் சுமை­யைக் குறைக்­க­வும் நோய்த் தடுப்­புப் பரா­ம­ரிப்­பில் கவ­னம் செலுத்­தும் திட்­டம் தொடங்­கப்­ப­ட­வுள்­ளதாக சுகா­தார அமைச்­சர் திரு ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

2030ஆம் ஆண்­டுக்­குள் சுகா­தா­ரத்­துக்­கான செலவு மும்­ம­டங்­காகி சுமார் 60 பில்­லி­யன் வெள்ளி­யைத் தொடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால் நாள்­பட்ட நோய்க்கு ஆளா­வ­தைத் தடுப்­பது அல்­லது தவிர்ப்­பது பெரிய அள­வில் உத­வக்­கூ­டும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"நாள்­பட்ட நோய்­கள் அல்­லது மோச­மான நோய்­கள் ஆகி­ய­வற்­றுக்கு உள்­ளா­வ­தைத் தவிர்த்­தால் நாம் ஆரோக்­கி­ய­மாக முது­மை­யடை­வோம், வாழ்க்­கைத் தர­மும் மேம்­படும்.

"நமது குடும்­பம் மீதுள்ள சுமை கணி­ச­மா­கக் குறை­யும், ஒட்­டு­மொத்த சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு மேலும் சுமு­க­மாக இயங்­கும், நமது தேசத்­தின் நிதி­வ­ளம் இன்­னும் சீராக இருக்­கும்," என்­றார் திரு ஓங். இவ்­வாண்டு நோய்த் தடுப்­புப் பரா­ம­ரிப்பு சுகா­தார அமைச்­சுக்கு முக்­கிய அம்­ச­மாக இருக்­கும்­ என்று அவர் குறிப்­பிட்­டார்.

இத்திட்டம் குறித்த மேல் விவரங்கள் சுகாதார அமைச்சின் செலவினம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவிக்கப்படும். வரும் வெள்ளிக்கிழமையன்று இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த விவாதம் நடைபெறும்.

'உட்­லண்ட்ஸ் ஹெல்த் கேம்­பஸ்' எனும் உட்­லண்ட்ஸ் சுகா­தார வளா­கத்­திற்­கான கட்­டு­மா­னப் பணி­க­ளின் அடிப்­படை வடி­வம் நிறை­வ­டை­வ­தைச் சித்­தி­ரிக்­கும் சடங்­கில் கலந்­து­கொண்­ட­போது திரு ஓங் பேசி­னார். அங்கு அமை­யும் மருத்­து­வ­ம­னை­கள் உள்­ளிட்டவற்றில் மொத்­தம் 1,800 படுக்­கை­கள் இருக்­கும்.

உட்­லண்ட்ஸ் சுகா­தார வளா­கத்தை இவ்­வாண்டு திறக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டது. ஆனால் கொவிட்-19 சூழ­லால் ஏற்­பட்ட மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­ காரணமாகக் கட்­டு­மா­னப் பணி­கள் தாம­த­ம­டைந்­தன. இந்த வளா­கம் அடுத்த ஆண்டு இறு­திக்­குள் திறக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மருத்­து­வர்­கள், தாதி­யர்கள், சுகா­தாரப் பராமரிப்பு ஊழி­யர்­கள் ஆகி­யோரை வேலைக்கு எடுப்­பது போன்ற நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் அர­சாங்­கம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்கு அதி­கம் செலவு செய்­வ­தா­கத் திரு ஓங் சுட்­டி­னார்.

"நமது மக்­கள்­தொகை தொடர்ந்து மூப்­ப­டை­வ­தால் இத்­தகைய நட­வ­டிக்­கை­களை எடுப்­பது அவ­சி­யம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

கிருமித்தொற்று சம்பவங்கள்

இதற்­கி­டையே, அண்­மைக் கால­மா­க கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­பங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது ஓர் எதிர்­பாரா நிகழ்வு அல்ல என்­ப­தை­யும் அமைச்­சர் ஓங் சுட்டினார். ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இம்­மா­தம் இரண்டு நாள்­களில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 13,000ஐத் தொட்­டது.

"ஓமிக்­ரான் வகை கிருமி வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது, அத­னால் ஒரு நாளைக்­குப் பதி­வா­கும் கிருமித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 15,000லிருந்து 20,000 அல்­லது அதற்­கும் அதி­க­மா­கப் பதிவாக­லாம் என்­பது எங்­களின் எதிர்­பார்ப்பு.

"இது­வரை சில நாள்­களில் எண்­ணிக்கை சுமார் 10,000ஆகப் பதி­வா­னது, இது சமா­ளிக்­கக்­கூடி­யதே," என்று அவர் சொன்­னார்.

ஒட்­டு­மொத்த கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை சிங்­கப்­பூ­ரின் நிலையை ஓர­ளவு எடுத்­துக்­காட்­டு­கிறது. எனி­னும், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பைப் பாதிக்­கும் புள்ளி விவ­ரங்­கள்­தான் கூடு­தல் முக்­கி­யத்துவம் வாய்ந்­தவை என்­ப­தைத் திரு ஓங் குறிப்­பிட்­டார். அந்த வகை­யில் 21 நோயா­ளி­கள் மட்­டுமே தீவிர சிகிச்சை பிரி­வில் இருக்­கின்­ற­னர், 128 பேருக்­குத்­தான் செயற்கை சுவா­சம் தேவைப்­ப­டு­கிறது.