துணைப் பிரதமர்: எல்லைகளை மீண்டும் திறந்துவிட கடப்பாடு

துணைப் பிரதமர்: எல்லைகளை மீண்டும் திறந்துவிட கடப்பாடு

3 mins read

சிங்­கப்­பூர் தனது பொரு­ளி­ய­லை­யும் எல்­லை­க­ளை­யும் மற்ற நாடு­களுக்கு மீண்­டும் திறந்­து­விட கடப்­பாடு கொண்­டுள்­ளது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

உலக அள­வில் கொவிட்-19 தொற்று பெருகி வந்­தா­லும், தனி­மைப்­ப­டுத்­தி­கொள்­ளத் தேவை­ இன்றிச் சென்றுவரும் வகை­யில் 20க்கு மேற்­பட்ட நாடு­க­ளு­டன் தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப்­பா­தைத் திட்­டத்­தைச் (விடி­எல்) செயல்­ப­டுத்தி இருப்­பது சிங்கப்­பூ­ரின் கடப்­பாட்டை எதி­ரொ­ளிப்­ப­தாக உள்­ளது என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

நிலைமை அனு­ம­தித்­தால் மேலும் பல நாடு­க­ளுக்கு விடி­எல் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று அவர் கூறி­னார்.

"தடுப்­பூ­சி­கள், கூடு­தல் தடுப்­பூ­சி­க­ளைப் போட்டு வரு­வ­தால் பல நாடு­கள் பய­ணக் கட்­டுப்­பாடு­களைத் தளர்த்தி வரு­கின்­றன. அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கு­வ­தில் சிங்­கப்­பூர் தன் பங்கை ஆற்ற கடப்­பாடு கொண்­டுள்­ளது," என்­றார் திரு ஹெங்.

சிங்­கப்­பூர் விமா­னக் கண்­காட்சி 2022 தொடக்­க­வி­ழா­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், எல்­லை­களை மீண்­டும் திறப்­ப­தில் சிங்­கப்­பூர் கொண்­டுள்ள கடப்­பாட்­டிற்கு அந்­நி­கழ்ச்­சியை மற்­றோர் எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக முந்­திய ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் விமா­னக் கண்­காட்சி இம்­மு­றை சிறிய அள­வில் இடம்­பெறு­கிறது.

எனி­னும், சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பர­வத் தொடங்­கிய பிறகு இடம்­பெ­றும் ஆகப் பெரிய வர்த்­தக நிகழ்வு இது­தான்.

விமா­னம் மற்­றும் வான்­வெ­ளித் துறை­க­ளின் நீண்­ட­கால வளர்ச்சி­யில் சிங்­கப்­பூர் கொண்­டுள்ள நம்­பிக்­கையை எடுத்­துக்­காட்­டும் முக்­கி­ய­மான நிகழ்வு இந்த விமா­னக் கண்­காட்சி என்று துணைப் பிர­தமர் சுட்­டி­னார்.

"இன்று நாம் எடுக்­கும் முயற்சி­கள் இப்­போ­தைய விமா­னப் பாதையை வரை­ய­றுப்­ப­தோடு மட்டு­மின்றி, அடுத்த 10-20 ஆண்­டு­களுக்­கான பாதை­யை­யும் வகுக்­கும்," என்­றார் பொரு­ளி­யல் கொள்­கை­கள் ஒருங்­கி­ணைப்பு அமைச்­சரு­மான ஹெங்.

கொரோனா பெருந்­தொற்­றுச் சூழ­லில், விமா­னம் மற்­றும் வான்­வெ­ளித் துறை­களில் வேலை­களைப் பாது­காக்­க­வும் அவற்­றின் செயல்­தி­றன்­க­ளைப் பாது­காக்­க­வும் அர­சு ஒரு பில்­லி­யன் வெள்ளிக்கு­மேல் செல­விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அத்­து­றை­க­ளுக்­கான உள்­கட்­ட­மைப்­பில் தொடர்ந்து முத­லீடு செய்­யப்­படும் என்று திரு ஹெங் தெரி­வித்­துள்­ளார்.

எடுத்­துக்­காட்­டாக, செங்­குத்­தாக மேலே உயர்ந்து பறக்­கும், தரை­யி­றங்­கும் திறன்­கொண்ட 'பறக்­கும் டாக்சி'களைப் பற்றி அவர் குறிப்­பிட்­டார்.

"இந்­தப் புதிய தொழில்­ துறையை ஊக்­கு­விக்­கும் வித­மாக, சிங்­கப்­பூ­ரில் பறக்­கும் டாக்­சி­களை முன்­னோட்ட முறை­யில் சோதித்­துப் பார்க்­கும் சாத்­தி­யத்தை ஆராய்ந்து வரு­கி­றோம். அது 'கிரேட்­டர் சௌதர்ன் வாட்­டர்­ஃபிரண்ட்' பகுதி­யில் இடம்­பெற வாய்ப்­புள்­ளது," என்­றார் துணைப் பிர­த­மர்.

கொவிட்-19 பெருந்­தொற்­றைக் கடந்­து­வர விமான, வான்­வெ­ளித் துறை­கள் இணைந்து செயல்­பட வேண்­டும் என்று அவர் வலி­யுறுத்­தி­னார்.

நேற்று மாலை நடந்த இன்­னொரு நிகழ்ச்­சி­யில், வான்­வெளித் துறை சிங்­கப்­பூ­ரின் ஒரு முக்­கி­ய­மான துறை­யா­கத் தொடர்ந்­தி­ருக்­கும் என்று வர்த்­தக, தொழில் இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்று சவா­லாக இருந்­தா­லும் அத்­துறை மீண்டு எழு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­வதாக அவர் குறிப்­பிட்­டார்.

சென்ற ஆண்டு வான்­வெ­ளித் துறை 8.8% வளர்ச்சி கண்­டது.

"கொவிட்-19 தொற்றில் இருந்து நாம் மீண்டுவருவதாலும் விமானப் போக்குவரத்திற்கான தேவை உயர்ந்து வருவதாலும் வான்வெளித் துறை எழுச்சி பெற்று, கிருமிப் பரவலுக்குப் பிந்திய காலத்தில் செழிப்புறும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று திரு டான் சொன்னார்.