இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் தற்போது மிகப் பெரிய போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரேனை ரஷ்யா எந்நேரமும் தாக்கி ஆக்கிரமிக்க முயற்சி செய்யக்கூடும் என்று மேற்கத்திய நாடு
களின் தலைவர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்கு எதிராக மிகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, போர் மூண்டால் ரஷ்ய நிறுவனங்களிடையே
அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் ஆகியவற்றின் புழக்கத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்தும் என்று திரு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். அவ்வாறு நேர்ந்தால் ரஷ்யாவின் பொருளியல் வெகு
வாகப் பாதிக்கப்படும் என்று அவர் கூறியதாக பிபிசி செய்தி நிறு
வனம் தெரிவித்தது.
எண்ணெய், எரிவாயு, உலோகங்கள் ஆகியவற்றை மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
எனவே, ரஷ்ய நிறுவனங்களிடம் அமெரிக்க டாலர் சென்றடையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டால், ரஷ்யா கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க டாலரை அதிகம்
சார்ந்திருக்காமல் செயல்பட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் நீண்ட காலமாகவே தமது நாட்டின் நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருகிறார்.
போர் தொடுக்கும் எண்ணத்தை ரஷ்யா கைவிடாவிட்டால்
லண்டனில் முதலீட்டுத் தொகையைத் திரட்ட ரஷ்ய நிறுவனங்
களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.
அதோடு லண்டனில் ரஷ்ய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடப்படும் என்று பிரிட்டன் மிரட்டல் விடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேனிடமிருந்து கிரைமியாவை ரஷ்யா கைப்பற்றியது.
ஆனால் இம்முறை உக்ரேனிடமிருந்து வேறு எந்த ஒரு பகுதியையும் கைப்பற்ற திட்டம் கொண்டிருக்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
போர் தொடுக்க ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் தூண்டுவதாகவும் அதற்காக ஐரோப்பாவில் பதற்றநிலையை அது ஏற்படுத்தி வருவதாகவும் அதிபர் புட்டின் குற்றம் சாட்டி உள்ளார். நேட்டோ படை ரஷ்யாவுக்கு எதிராக வீரர்களைக் குவித்து வருவதாக அதிபர்
புட்டின் குறைகூறியுள்ளார். இதற்கிடையே, உக்ரேனுடனான எல்லை அருகில் 150,000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள்
முகாமிட்டுள்ளனர்.
1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் கலைந்தபோது உக்ரேனிடம் இழந்த சில நிலப் பகுதிகளை ரஷ்யா இம்முறை கைப்பற்ற எண்ணம் கொண்டிருக்கக்கூடும் என்று அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகியவை அச்சம் தெரிவித்தன.

