கொவிட்-19 நெருக்கடிநிலை
காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது எல்லைகளை மூடிவைத்திருந்த ஆஸ்திரேலியா, இன்று முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் வரவேற்கிறது.
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாலும் அந்நாட்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
"எல்லைகளைத் திறப்பதற்கான காத்திருப்பு முடிவுக்கு வந்து
விட்டது," என்று மெல்பர்ன் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
அறவே கொவிட்-19 கிருமித்தொற்று இல்லாத சூழலை உருவாக்க ஆஸ்திரேலியா முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த அணுகுமுறையிலிருந்து மாறி கொவிட்-19 கிருமியுடன் வாழும் நிலையை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டுள்ளதை இந்த எல்லைத் திறப்பு காட்டுவதை சுகாதார நிபுணர்கள் சுட்டினர்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் மிகக் கடுமையான உடல்நல பாதிப்பு, மரணங்கள் ஆகியவற்றைக் குறைக்க தடுப்பூசி போடும் திட்டத்துக்கு அந்நாடு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 2.7 மில்லியன் பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலா
னோருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓமிக்ரான் கிருமி வகை தலைதூக்கியதை அடுத்து
கிருமித்தொற்று ஏற்பட்டது.
ஆனால் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகம் உள்ள நாடுகளில்
ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதுக்கும் மேற்பட்டோரில் 94 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் இருமுறை தடுப்பூசி
போட்டுக்கொண்டுள்ளனர்.
வளர்ச்சி அடைந்த மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடுகையில்
ஆஸ்திரேலியாவின் கொவிட்-19 மரண எண்ணிக்கை குறைவு.
கிருமித்தொற்றால் இதுவரை ஆஸ்திரேலியாவில் 5,000க்கும் குறைவான உயிரிழப்புகள் ஏற்
பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவீன்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் மேலும் 16,600க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கிருமித்தொற்று காரணமாக குறைந்தது 33 பேர் நேற்று மாண்டனர்.
ஆஸ்திரேலியா அதன் எல்லை
களைத் திறந்துவிட்டுள்ளபோதிலும் மற்ற நாடுகளிலிருந்து பயணிகள் அங்கு செல்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சுற்றுப்பயண நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க ஆஸ்திரேலியா முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியா அதன் எல்லைகளைப் படிப்படியாகத் திறந்துவந்துள்ளது.
முதலில் ஆஸ்திரேலியாவி
லிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லவும் ஆஸ்திரேலியாவுக்கு வரவும் ஆஸ்திரேலியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பிறகு, வெளிநாட்டு மாணவர்களுக்கும் சில ஊழியர்
களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இன்று முதல் சுற்றுப்பயணிகளும் வர்த்தகப் பயணிகளும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லலாம்.

