உலக நாடுகள் கண்டனம்

உலக நாடுகள் கண்டனம்

3 mins read
42cdea01-f60a-4d3a-9aee-0e70bbad1e86
டொனட்ஸ்க் வட்டாரத்தில் உள்ள அவ்டிவ்கா நகரில் நேற்று முன்தினம் ராணுவ வாகனத்தில் சென்ற உக்ரேனியப் படைவீரர்கள். படம்: ஏஎஃப்பி -

கிழக்கு உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்தன

கிழக்கு உக்­ரே­னில் கிளர்ச்­சி­யாளர்­கள் வச­மி­ருந்த டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பகு­தி­க­ளைத் தனி நாடு­க­ளாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் அங்­கீ­க­ரித்­துள்­ளார்.

அத­னைத் தொடர்ந்து, அப்­பகு­தி­க­ளுக்­குள் செல்­லும்­படி ரஷ்­யப் படை­க­ளுக்கு அதி­பர் புட்­டின் உத்­த­ர­விட்­டுள்­ளார். அங்கு ரஷ்­யப் படை­கள் அமை­தி­பே­ணும் பணி­களில் ஈடு­படும் என்று அவர் கூறி­யி­ருக்­கி­றார்.

ஆனால், அவர்­கள் அமை­தி­பே­ணு­வர் எனக் கூறு­வது முட்­டாள்­த­ன­மா­னது என்று அமெ­ரிக்கா சாடி­யுள்­ளது. ரஷ்­யா­வின் இந்த நட­வ­டிக்கை போருக்­கான முகாந்­தி­ரம் என்­றும் அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

அதி­பர் புட்­டி­னின் அங்­கீ­க­ரிப்­பைத் தொடர்ந்து, டொனட்ஸ்க், லுகான்ஸ்க் வட்­டா­ரங்­களில் அமெ­ரிக்­கர்­கள் புதி­தாக முத­லீடு செய்­ய­வும் வர்த்­த­கம் புரி­ய­வும் தடை விதிக்­கும் செய­லாக்க ஆணை­யில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கையெ­ழுத்­திட்­டார்.

இவ்­வி­வ­கா­ரத்­தில் உக்­ரே­னு­டன் ஒற்­று­மை­யா­க­வும் உறு­தி­யா­க­வும் இணைந்து செயல்­ப­டு­வ­தாக ஐரோப்­பிய ஒன்­றி­யம் உறு­தி­ய­ளித்­தது.

ரஷ்­யா­மீது பொரு­ளி­யல் தடை­களை விதிப்­பது தொடர்­பில் ஐரோப்­பிய ஒன்­றி­யத் தூதர்­கள் நேற்று கூடி ஆலோ­சனை மேற்­கொண்­ட­னர்.

பிரிட்­டன் உட­ன­டி­யா­கப் பொரு­ளி­யல் தடை­களை விதிக்­கும் என்­றும் அவை ரஷ்­யா­வைக் கடு­மை­யாகப் பாதிக்­கும் என்­றும் பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் கூறியிருக்கிறார்.

அமை­தி­பே­ணும் பணி­க­ளுக்­காக ரஷ்­யப் படை­கள் அவ்­விரு பகு­தி­க­ளுக்­குள் செல்­வ­தா­கக் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­தமர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­தார்.

அதி­பர் புட்­டி­னின் அறி­விப்­பிற்கு­முன், ஜெர்­மா­னி­யப் பிர­த­மர் ஒலாஃப் சோல்­சும் பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வல் மெக்­ரோ­னும் அவ­ரி­டம் பேசி­னர்.

இந்­நி­லை­யில், எத­னைக் கண்­டும் எவ­ரைக் கண்­டும் தம் நாடு அஞ்­சாது என்று உக்­ரே­னிய அதி­பர் வோலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­துள்­ளார். ரஷ்­யா­வு­ட­னான அர­ச­தந்­திர உற­வு­களை உக்­ரேன் முறித்­துக்­கொள்­ளக்­கூடும் என்­றும் அவர் கூறி­யுள்ளார்.

அமெ­ரிக்க மதிப்­பீட்­டின்­படி, உக்­ரேன் எல்­லை­யில் ஏறக்­கு­றைய 150,000 படை­வீ­ரர்­களை ரஷ்யா குவித்­துள்­ளது. இத­னால், அங்கு எந்­நே­ர­மும் போர் மூள­லாம் என்ற அச்­சம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இருந்து வரு­கிறது.

இதற்­கி­டையே, ரஷ்­யா­வின் 'தனி நாடு­கள்' அங்­கீ­க­ரிப்­பைத் தொடர்ந்து, ஐக்­கிய நாடு­கள் பாது­காப்பு மன்றம் நேற்று அவ­ச­ர­மாகக் கூடி­யது.

தனது படை­கள் அமை­தி­பேணும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் என்று ரஷ்யா சொல்­வதை ஏற்க மறுத்த ஐநா­விற்­கான அமெ­ரிக்­கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்­ஃபீல்ட், "உண்­மை­யில் அவை என்­ன­வென்று எங்­க­ளுக்­குத் தெரி­யும்," என்­றார்.

அவ்­விரு பகு­தி­க­ளைத் தனி நாடு­க­ளாக அங்­கீ­க­ரிப்­ப­தா­கக் கூறு­வது, உக்­ரேன்­மீது படை­ எடுக்க ரஷ்யா உருவாக்கிய கார­ணம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அண்­மைய ஆண்­டு­க­ளாக, டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பகு­தி­யைச் சேர்ந்த பல­ருக்கு ரஷ்­யக் கடப்­பி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக 'பிபிசி' செய்தி கூறு­கிறது.

கடந்த வாரம் முதல் அவ்­விரு பகு­தி­களில் இருந்­தும் பெண்­கள், குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் வெளி­யேற்­றப்­பட்டு, ரஷ்­யா­விற்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­ற­னர்.

அதி­பர் புட்­டின் நேற்று முன்­தி­னம் ஆற்­றிய உரை­யில், ரஷ்ய வர­லாற்­றின் ஒருங்­கி­ணைந்த பகுதி­யாக உக்­ரேன் விளங்­கி­யது என்­றும் கிழக்கு உக்­ரேனை பண்­டைய ரஷ்­யப் பகுதி என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பேச்சுவார்த்தைமூலம் தீர்வு: சிங்கப்பூர் வலியுறுத்து

உக்ரேன் நெருக்கடியில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வை எட்ட வேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தி இருக்கிறது. "உக்ரேன் - ரஷ்யா எல்லையில் அதிகரித்துவரும் பதற்றநிலையாலும் பிரிந்து சென்ற இரு உக்ரேனிய வட்டாரங்களை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவாலும் சிங்கப்பூர் பெரிதும் கவலை அடைந்து உள்ளது. உக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், ஆட்சி எல்லைகள் ஆகியவை மதிக்கப்பட வேண்டும்," என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து முதல் விமானம் புறப்பட்டது

உக்ரேனில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அழைத்துவரும் நோக்கில், ஏர் இந்தியாவின் முதல் விமானம் நேற்றுக் காலை அந்நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றது. 200 இருக்கைகள் கொண்ட அவ்விமானம் நேற்று நள்ளிரவு புதுடெல்லியை வந்தடையும் என்று சொல்லப்பட்டது. நாளையும் வரும் 26ஆம் தேதியும் மேலும் இரு ஏர் இந்தியா விமானங்கள் உக்ரேன் செல்லும். உக்ரேனில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் நலமாக இருப்பது முக்கியம் என்றும் ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இந்தியப் பேராளர் டி.எஸ்.திருமூர்த்தி கூறினார்.