இந்தியா: மார்ச் 15 முதல் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம்

இந்தியா: மார்ச் 15 முதல் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம்

2 mins read

இந்­தி­யா­வில் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு, அடுத்த மாதத்­தில் இருந்து வழக்­க­மான அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் மீண்­டும் தொடங்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரு­கிறது. இத­னை­ய­டுத்து, வழக்­க­மான அனைத்­து­லக விமா­னச் சேவை­களை மீண்­டும் தொடங்கு­வது குறித்­துச் சுகா­தார அமைச்­சு­டன் ஆலோ­சித்த விமா­னப் போக்கு­வ­ரத்து அமைச்சு, அதன் தொடர்­பில் உறு­தி­யா­ன­தொரு முடி­விற்கு வந்­துள்­ள­தா­கச் சொல்­லப்­படு­கிறது.

ஆயினும், விமா­னப் போக்கு­வரத்­துத் தலைமை இயக்­க­கத்­தி­டம் இருந்து அதி­கா­ர­பூர்­வ­ அறி­விப்­பு எதுவும் வெளி­யா­க­வில்லை.

"வழக்­க­மான அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் மார்ச் 15ஆம் தேதி­யில் இருந்து தொடங்­கப்­ப­ட­லாம். அதே நேரத்­தில், வெளி­நாடு­களில் இருந்து இந்­தியா வரு­வோ­ருக்­கென இந்­திய விமான நிலை­யங்­களில் பின்­பற்­றப்­படும் வழி­காட்டி நெறி­மு­றை­கள் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும்," என்று அர­சாங்­கத் தரப்­புத் தக­வல்­கள் கூறு­வ­தாக 'என்­டி­டிவி' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இம்­மா­தம் 28ஆம் தேதி­வரை வழக்­க­மான அனைத்­து­லக விமா­னச் சேவை­களை இயக்­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கொரோனா பெருந்­தொற்று கார­ண­மாக அத்­த­கைய விமா­னச் சேவை­கள் கடந்த 2020 மார்ச் 23ஆம் தேதி­யி­லி­ருந்து இயக்­கப்­ப­டு­வ­தில்லை.

இரு­த­ரப்­புச் சிறப்பு ஏற்­பா­டு­கள்­மூ­லம் 2020 ஜூலை மாதத்­தில் இருந்து இந்­தி­யா­விற்­கும் 40 நாடு­க­ளுக்­கும் இடையே பய­ணி­கள் சிறப்பு விமா­னங்­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வெளி­நா­டு­களில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்­கான சுகா­தார அமைச்­சின் திருத்­தப்­பட்ட வழி­காட்டி நெறி­மு­றை­கள் இம்­மா­தம் 14ஆம் தேதி நடப்­பிற்கு வந்­தது. ஏழு நாள்­கள் கட்­டா­ய­மாக வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தும் எட்­டாம் நாளில் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டி­ய­தும் ரத்து செய்­யப்­பட்­டது.

வெளி­நாட்­டுப் பய­ணி­கள் பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்­கு­முன் 72 மணி நேரத்­திற்­குள் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்று பதி­வேற்­றம் செய்ய வேண்­டும். அல்­லது முழு­மை­யாக கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான சான்­றி­தழை அவர்­கள் பதி­வேற்­றம் செய்­ய­லாம்.

அத்­து­டன், தொற்று அபா­ய­முள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லும் அகற்­றப்­பட்­டது.