ஊழியர் சேர்ப்பு, அதிக வேலை நேரம்: மருந்தகங்கள் ஆயத்தம்

ஊழியர் சேர்ப்பு, அதிக வேலை நேரம்: மருந்தகங்கள் ஆயத்தம்

2 mins read

பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள் சில­வற்­றைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் கூடு­தல் நேரம் வேலை பார்க்­கத் தோதாக ஊழியர்­க­ளை அமர்த்துகிறார்கள்.

ஊழி­யர்­க­ளை­யும் அவர்­கள் புதி­தாக வேலை­களில் சேர்க்­கி­றார்­கள். இதன்­மூ­லம் அதிக நேரம் செயல்­பட்டு இதர சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் சுமை­யைக் குறைக்க அவர்­கள் முயல்­கி­றார்­கள்.

நாடு முழு­வ­தும் உள்ள இத்­த­கைய குறிப்­பிட்ட மருந்­த­கங்­கள் பிப்­ர­வரி 25ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதிவரை வார நாள்­களில் இரவு 11 மணிவரை செயல்­படும்.

வார இறுதி நாள்­களில் பிற்­பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை­யி­லும் வார முடிவு இரவு நேரத்­தி­லும் செயல்­படும் என்று அமைச்சு அறி­வித்­துள்­ளது.

தனி­யார் மருந்­த­கங்­களில் கூடும் நோயா­ளி­களைப் பல மருந்­த­கங்­க­ளுக்­கும் பிரித்­து­விட்டு சுமையைக் குறைக்­கும் முயற்­சி­யாக இந்த ஏற்­பாடு இடம்­பெ­று­கிறது.

ஆரம்ப பரா­ம­ரிப்பு மருத்­து­வரை பார்க்­கும்­படி மருத்­துவக் கவ­னிப்பு தேவைப்­படு­வோருக்கு அமைச்சு ஆலோ­சனை தெரி­வித்­தி­ருந்­தது.

மருத்­து­வ­ம­னை­க­ளின் அவ­சர சிகிச்சைப் பிரி­வுக்குப் போக வேண்­டாம் என்­றும் அவர்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறியது.

இந்நிலையில், சில பொது சுகாதார ஆயத்­த­நிலை மருந்­த­கங்கள் அதிக நேரம் செயல்­பட முடிவு செய்­தன. இதன்­மூ­லம் ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய கூடு­தல் சுமை குறை­யும்.

மருந்­த­கங்­கள் குறித்த மேல்­வி­வ­ரங்­களை flu.gowhere.gov.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் பெற்றுக்­கொள்­ள­லாம்.

இவ்­வே­ளை­யில், தெம்­ப­னிஸ் சீமெய், பிடோக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் செயல்­படும் 15 மருந்­த­கங்­களில் நேற்று ஏறத்­தாழ ஐந்து முதல் 10 நோயா­ளி­கள் காத்து இருந்­த­தை தான் கண்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

தெம்­ப­னி­சில் செயல்­படும் பொது சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­க­மான 'ஹெல்த்வே மெடிக்­கல் சென்­டர்' என்ற மருந்­த­கத்­தில் பல­ரும் சிகிச்­சைக்காக காத்து இருந்­த­னர். அந்த மருந்­த­கத்­தில் உள்ள நோயா­ளி­கள் காத்­தி­ருக்­கும் பகு­திக்கு அப்­பா­லும் பல­ரும் அங்கு இருந்­த­தைக் காண முடிந்­தது.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் இது­வரை இல்­லாத அள­வில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை புதி­தாக 26,032 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­னது.

இதற்கு முன் இம்­மா­தம் 15ஆம் தேதி­யன்று ஆக அதி­க­மான எண்­ணிக்­கை­யில் 19,420 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது.

மொத்­தம் 1,608 பேர் மருத்­து­வ­மனை­களில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பதி வான எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இது சற்று அதி­கம்.

46 பேர் மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வந்­த­னர். 190 நோயா­ளி­களுக்குச் செயற்கை சுவாச உதவி தேவைப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான நால்­வர் மர­ண­ம­டைந்­த­னர்.