கியவ் நகரில் ரஷ்யப் படைகள்

கியவ் நகரில் ரஷ்யப் படைகள்

4 mins read
59d814ed-2a47-4fc8-9102-3154e17f2d3b
ரஷ்யப் படைகள் நெருங்கும் வேளையில் கியவ் நகரின் மையப்பகுதியைக் காக்கும் பணியில் உக்ரேன் ராணுவத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

உக்ரேன் ராணுவம் ஆயுதங்களைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா அறிவிப்பு

உக்­ரேன்­மீ­தான தாக்­கு­தலை ரஷ்யா தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இரண்­டாம் நாளான நேற்று ரஷ்­யப் படை­கள் உக்­ரேன் தலை­நகர் கியவ்­விற்­குள் நுழைந்­து­விட்­டன.

கியவ்வின் வடக்கு மாவட்­ட­மான ஒபலோன்ஸ்கியில் ரஷ்­யப் படை­கள் மையம் கொண்­டி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. உக்­ரேன் நாடா­ளு­மன்­றத்­தில் இருந்­தும் கியவ் நக­ரின் மையப் பகு­தி­யில் இருந்­தும் 9 கிலோமீட்­ட­ர் வடக்கே அப்­ப­குதி அமைந்­துள்­ளது.

அந்நகரின் ஆளரவமற்ற சாலை­களில் ரஷ்­யக் கவச வாக­னங்­கள் சென்­ற­படி இருந்­த­தைக் காணொ­ளி­கள் காட்­டின.

இந்நிலையில், கியவ்­விற்கு அருகே அமைந்­துள்ள முக்­கி­ய­மான ஹாஸ்­ட­மல் விமா­னப்­ப­டைத் தளத்­தைக் கைப்­பற்­றி­வி­ட்டதாக ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­துள்­ளது. அப்­போ­தைய சண்­டை­யில் உக்­ரேன் ராணு­வத்­தி­னர் 200 பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, உக்ரேனில் 1986ல் ஆக மோச­மான அணு­உலை விபத்து நிகழ்ந்த, கியவ்விலிருந்து 130 கி.மீ. தொலைவிலிருக்கும் செர்­னோ­பில் பகு­தியை ரஷ்ய ராணு­வம் கைப்­பற்­றி­யது.

இத­னி­டையே, ராணு­வத்­திற்கு ஆள்­சேர்க்­கும் முயற்­சியை உக்­ரேன் முடுக்­கி­விட்­டுள்­ளது. வயது வரம்­பின்றி குடி­மக்­கள் அனை­வ­ரும் ராணு­வத்­தில் சேரும்­படி உக்­ரேன் தற்­காப்பு அமைச்சு டுவிட்­டர் மூலம் அழைப்பு விடுத்­து இருக்கிறது.

"இன்று, உக்­ரே­னுக்கு எல்­லாம் தேவைப்­ப­டு­கிறது. ராணு­வத்­தில் சேர்­வ­தற்­கான எல்லா நடை­மு­றை­களும் எளி­மை­யாக்­கப்­பட்­டு­விட்­டன. கட­வுச்­சீட்­டும் அடை­யாள எண்­ணும் போதும்," என்று அந்த டுவிட்­டர் பதி­வில் கூறப்­பட்டு உள்­ளது. அதற்­கே­து­வாக, 18 முதல் 60 வய­திற்­குட்­பட்ட ஆண்­கள் நாட்­டை­விட்டு வெளி­யேற தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்துடன், ரஷ்யப் படைகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் பெட்ரோல் குண்டுகளை வீசி எதிரிகளைச் செயலிழக்கச் செய்யுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

முன்­ன­தாக, முதல் நாள் தாக்­கு­த­லில் உக்­ரே­னி­யர்­கள் 137 பேர் இறந்­து­விட்­ட­தாகவும் 312 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்­நாட்டு அதி­பர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார்.

தமக்­கும் தம் குடும்­பத்­திற்­கும் ரஷ்யா குறி­வைத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், தம்மை அழிப்­ப­தன்­மூ­லம் உக்­ரேனை அர­சி­யல்­ரீ­தி­யாக அழித்­தொ­ழிக்க விரும்பு­கிறது என்­றும் குற்­றம் சாட்­டி­னார்.

உக்­ரே­னுக்­குள் ரஷ்­யப் படை­கள் வேக­மாக முன்­னே­று­வ­தைத் தடுக்க ஐரோப்­பி­யத் தலை­வர்­கள் போதிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­றும் அவர் சாடி­னார்.

"இரண்­டாம் உல­கப் போரைப் போல இனி ஒரு­போ­தும் இராது என்று கூறி­னீர்­கள். ஆனால், இப்­போது அதைக் காண்­கி­றோம்," என்­றார் ஸெலென்ஸ்கி.

மேலும், ரஷ்­யா­வின் மூர்க்­கத் தனத்­தைத் தடுக்க இப்­போ­தும் நேர­முள்­ளது என்ற அவர், தங்­கள் நாடு­க­ளின் அர­சாங்­கங்­களை நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி, ஐரோப்­பிய நாடு­க­ளின் மக்­கள் போராட்­டத்­தில் இறங்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், ரஷ்­யத் தலைநகர் மாஸ்­கோ­வில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர் செர்கே லாவ்­ரோவ், உக்­ரேன் அர­சாங்­கத்­தின் நிலைத்­தன்மை குறித்­துக் கேள்வி எழுப்­பி­னார்.

"உக்­ரேன் ராணு­வம் எங்­க­ளது கோரிக்­கைக்­குச் செவி­ம­டுத்து, ஆயு­தங்­க­ளைக் கீழே போட்­டால், எந்த நேரத்­திலும் நாங்­கள் பேச்சு­வார்த்­தைக்­குத் தயார்," என்று லாவ்­ரோவ் தெரி­வித்­துள்­ளார்.

மேற்­கத்­திய நாடு­கள் வேண்டு­மென்றே உக்­ரேனை ரானு­வ­ம­ய­மாக்­கு­வ­தாக அவர் குற்­றம் சாட்­டி­னார். அத்­து­டன், உக்­ரே­னி­யர்­கள் தங்­க­ளது எதிர்­கா­லத்­தைத் தேர்வு செய்ய வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

முன்னதாக, ரஷ்­யா­வால் தனி நாடு­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, ரஷ்ய ஆத­ர­வுக் கிளர்ச்­சி­யா­ளர்­கள் வச­முள்ள டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பகு­தி­க­ளின் பிர­தி­நிதி­களை லாவ்­ரோவ் சந்­தித்­துப் பேசி­னார். அந்தக் காணொளியை ரஷ்ய வெளி­யு­றவு அமைச்சு வெளி­யிட்­டது.

'450 வீரர்களை இழந்த ரஷ்யா'

இத­னி­டையே, உக்­ரேன் முழு­வதை­யும் கைப்­பற்ற ரஷ்யா நோக்­கம் கொண்­டுள்­ளது என்­றும் ஆனா­லும் முதல் நாளான நேற்று முன்­தி­னம் அதன் முதன்மை இலக்கு­கள் ஈடே­ற­வில்லை என்­றும் பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்­சர் பென் வாலஸ் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், சண்­டை­யில் 450க்கும் மேற்­பட்ட வீரர்­களை ரஷ்யா இழந்து­விட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

அடிபணிய மாட்டேன்: ஆசிரியை சூளுரை

செஞ்சிலுவைச் சங்கம் US$100,000 ஆதரவு

உக்ரேனில் நடக்கும் சண்டையால் பாதிக்கப் படுவோருக்கு 100,000 அமெரிக்க டாலர் (S$135,400) மதிப்பிலான ஆதரவு வழங்கப்படும் என சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்காக அவ்வமைப்பு பொதுமக்களிடம் நிதி திரட்டியும் வருகிறது.

உக்ரேனின் சுகைவ் நகர்மீது ரஷ்ய ராணுவம் தொடுத்த தாக்குதலில், சன்னல் நொறுங்கி, கண்ணாடித் துண்டுகள் துளைத்ததில் ஒலினா குரிலோ, 52 (படம்), எனும் இந்த ஆசிரியையின் முகமெல்லாம் ரத்தம். ஆயினும், சற்றும் கலங்காது "எச்சூழலிலும் புட்டினுக்கு நான் அடிபணிய மாட்டேன். அதற்கு உயிரைவிடுவதே மேல். என் தாய்நாட்டிற்காக எதையும் செய்வேன்," என்று இவர் சூளுரைத்தார்.

படம்: ஏஎஃப்பி

புட்டின்-மோடி பேச்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி வழியாகப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரஷ்யா, 'நேட்டோ' நாடுகளுக்கு இடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.