'மோசடிகளைத் தடுக்க இரண்டு மடங்கு முயற்சி'

'மோசடிகளைத் தடுக்க இரண்டு மடங்கு முயற்சி'

2 mins read

சிங்­கப்­பூ­ரில் மோச­டி­க­ளைத் தடுப்­ப­தற்­கான முயற்­சி­களை அர­சாங்­கம் இரண்டு மடங்­காக்­கு­கிறது என்று உள்­துறை, சட்ட அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்து இருக்­கி­றார்.

சட்­ட­வி­ரோத பரி­வர்த்­த­னை­களை நிறுத்த காவல்­துறை பாடு­பட்டு வரு­கிறது.

இருந்­தா­லும் அத்­த­கைய செயல்­க­ளின் மூலம் பணம் சிங்­கப்­பூ­ரின் எல்­லை­க­ளுக்கு அப்­பா­லும் கைமா­று­வ­தால் தொடர்ந்து காவல்­துறை சிர­ம­மான சவாலை எதிர்­நோக்­கு­கிறது என்று அமைச்­சர் சண்முகம் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு வகை மோச­டி­களில் சிக்கி அப்­பாவி மக்­கள் குறைந்­த­பட்­சம் $633.3 மில்­லி­யன் தொகையை சென்ற ஆண்­டில் இழந்துவிட்டனர். இது 2020ல் மோச­டி­களில் பறி­போன $268.4 மில்­லி­ய­னை­விட ஏறத்­தாழ 2.5 மடங்கு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"நாம் முயற்­சி­களை இரண்டு மடங்­காக்­கு­கி­றோம். குறிப்­பிட்ட வகை பரி­வர்த்­தனை­களைத் தடுக்க காவல்­துறை மேலும் அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கிறது.

"ஆனா­லும் அத்­த­கைய சட்­ட­வி­ரோத பரி­வர்த்­த­னை­க­ளின் சிக்­க­லான தன்மை கார­ண­மா­க­வும் மின்­னி­லக்­கம் மூலம் அவை இடம்­பெ­று­வ­தா­லும் சவால் பெரி­ய­தாக விரி­வ­டை­கிறது," என்றார் அமைச்­சர்.

திரு சண்­மு­கம், மார்­சி­லிங்­கில் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்­து­கொண்­டார். அப்­போது அவர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

"மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் பறி­கொ­டுத்த பணத்தை மீட்­பது அதி­கா­ரி­கள் எதிர்­நோக்­கும் சவால்­களில் ஒன்­றாக இருக்­கிறது.

"குறிப்­பாக மோச­டிக்­கா­ரர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வெளியே இருப்­பார்­க­ளே­யா­னால் இந்­தச் சவால் அதி­கா­ரி­க­ளுக்­குச் சிக்­க­லா­ன­தா­கி­வி­டும்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"பெரும்­பா­லும் இத்­த­கைய மோச­டிக்­காரர்­கள் வெளி­நா­டு­களில் இருந்து செயல்­படு­கி­றார்­கள். பணம் வெளி­யே­றி­விட்­டால் அதை எப்­படி மீட்­பது?. அந்­தப் பணம் பல வழி­களில் பல்­வேறு இடங்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கிறது. இது மிகப் பெரிய சவால்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

மோச­டி­களில் சிக்கி அப்­பாவி மக்­கள் பணத்தை இழப்­ப­தைத் தடுக்க உத­வும் வகை­யில் காவல்­துறை 2019ல் மோசடி எதிர்ப்பு நிலை­யம் ஒன்றை அமைத்­தது.

சிங்­கப்­பூ­ரில் அப்­பாவி மக்­கள் இழந்து இருக்­கும் $700 மில்­லி­யன் தொகை­யில் $160 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகையை காவல்­து­றை­யி­னர் மீட்டு இருக்­கி­றார்­கள்.

மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்தி இருப்­பதாக நம்­பப்­படும் 24,000க்கும் மேற்­பட்ட வங்­கிக் கணக்­கு­களை அதி­கா­ரி­கள் முடக்கி இருக்­கி­றார்­கள். மோச­டி­க­ளைத் துடைத்­தொ­ழிப்­ப­தற்­கான தலை­சி­றந்த வழி, அவை அறவே நிக­ழா­த­படி தடுப்­ப­து­தான் என்று திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

மோசடித் தக­வல்­களை வடி­கட்­டி­வி­டக் கூடிய 'ஸ்கேம்­ஷீல்டு' என்ற கைப்பேசிச் செய­லியை அமைச்­சர் எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார்.

இந்த அனைத்து முயற்­சி­க­ளின் விளை­வாக மிகக் கணி­ச­மான அள­விற்கு மோசடி­கள் தடுக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் திரு சண்­மு­கம் கூறி­னார்.

செய்தி: கி.ஜனார்த்தனன்