புதிய பன்னோக்கு அரங்கம்: அனைத்து இன, சமய மக்களுக்கு ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயம் அழைப்பு

புதிய பன்னோக்கு அரங்கம்: அனைத்து இன, சமய மக்களுக்கு ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயம் அழைப்பு

1 mins read
11652425-3ceb-417a-b7cd-a301ffdd420a
மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தின் புதிய நான்கு மாடிக் கட்டடம் நேற்று திறக்கப் பட்டது. இந்த வசதிகளை இந்துக்கள் அல்லது இந்தியர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை என்றும் அனைவரையும் வரவேற்கிறோம் என்றும் ஆலயத் தலைவர் சுரேஷ் குமார் தெரிவித்தார். படம்: திமத்தி டேவிட் -

கி. ஜனார்த்­த­னன்

மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆல­யத்­தின் பலநோக்கு மண்­ட­பத்தை அனைத்து இனங் களை­யும் சம­யங்­க­ளை­யும் சேர்ந்த பொது­மக்­கள் பயன்­ப­டுத்­த­லாம் என்று அந்த ஆல­யத்­தின் நிர்­வா­கக் குழு தெரி­வித்­தது.

நேற்றுக் காலை நடந்த அந்தப் புதிய நான்கு மாடி கட்­ட­டத்­தின் அதி­கா­ர­பூர்வ திறப்பு நிகழ்ச்­சி­யில் ஏறக்குறைய 100 பேர் கலந்து­கொண்­ட­னர். கட்­டு­மா­னப் பணி­களுக்கு நிதி­ய­ளித்த 65 ஆத­ர­வா­ளர்­கள் இந்­நி­கழ்ச்­சி­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­னர்.

புதிய கட்­ட­டத்­தில் 250 பேர் வரை அம­ரக்­கூ­டிய பன்னோக்கு மண்­ட­பம், வகுப்­ப­றை­கள், ஆடல் அறை, திறந்த வெளிக் கூரைமாடம் ஆகி­யவை உள்ளன. அக்­கட்­ட­டம் $4.3 மில்­லி­யன் செல­வில் கட்­டப்­பட்­டது.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், தற்­காப்பு மற்­றும் மனி­த­வள அமைச்­சு­க­ளுக்­கான மூத்­தத் துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது ஆகி­யோர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்­க­ளி­டம் பேசிய திரு சண்­மு­கம், இந்­தக் கட்­ட­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யோர் பல்­வேறு இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் எனக் குறிப்­பிட்­டார்.

புதிய கட்­ட­டத்­தில் இடங்­க­ளுக்­காக முன்­ப­திவு செய்ய ஆர்வமுள்­ளோர், ஆலயத்தை 6368-0030 என்ற எண்­ணில் அழைக்­க­லாம். அல்­லது admin@srisivakrishnatemple.com என்ற மின்­னஞ்­சல் மூலம் தொடர்புகொள்­ள­லாம்.