தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேன்: உடனடியாக போரை நிறுத்தவும்

2 mins read
41571466-5013-401e-aa06-305967a583d4
உக்ரேனியப் படைகளால் அழிக்கப்பட்ட ரஷ்ய கவச வாகனம்.படம்: ஏஎஃப்பி -

போர் நிறுத்­தம் உட­ன­டி­யாக அமல்

ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் ரஷ்யா அதன் படை­களை உக்­ரே­னிய மண்­ணி­லி­ருந்து மீட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­றும் உக்­ரேன் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

உக்­ரே­னுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை உக்­ரேன்-பெல­ருஸ் எல்­லைப் பகு­தி­யில் நடை­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அதே சம­யம் ஆயு­தங்­களை விட்­டு­விட்டு உக்­ரே­னி­லி­ருந்து வெளி­யேறி உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு ராணுவ வீரர்­க­ளை

உக்­ரே­னிய அதி­பர் வொலொ­டி­மிர் ஸெலென்ஸ்கி எச்சரித்தார்.

நாட்­டைத் தற்­காக்க உக்­ரே­னி­யப் படை­யி­னர் போரிட்­ட­தில் 4,500க்கும் மேற்­பட்ட ரஷ்ய வீரர்­கள் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

அத்­து­டன், உக்­ரேனை

உட­ன­டி­யாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் உறுப்­பி­ன­ராக்க வேண்­டும் என்று திரு ஸெலென்ஸ்கி

கேட்­டுக்­கொண்­டார்.

ரஷ்யப் படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐநாவிடம் உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும் கேட்டுக்கொண்டன.

இந்­நி­லை­யில், நேற்று மாலை நில­வ­ரப்­படி போர் கார­ண­மாக உக்­ரே­னில் ராணுவ வீரர்­க­ளைச் சேர்க்­கா­மல் சிறு­வர்­கள் உட்­பட குறைந்­தது 210 பேர் மாண்­டு­விட்­ட­தாக அந்­நாட்­டின் மனித உரிமை ஆணை­யர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, அதி­பர் ஸெலென்ஸ்­கி­யைத் தேடிக் கண்டு பிடித்­துக் கொல்ல செச்­சன்

சிறப்­புப் படை­யி­னரை ரஷ்யா அனுப்பி வைத்­துள்­ள­தாக உறுதி செய்­யப்­ப­டாத தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன. ஆனால் செச்­சன் படை­யி­னர் பலரை உக்­ரே­னி­யப் பாது­காப்­புப் படை கொன்று ரஷ்­யா­வின் திட்­டத்­துக்­குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது ஒரு­பு­றம் இருக்க, ரஷ்ய அர­சுக்­குச் சொந்­த­மான செய்தி நிறுவ­னத்­தின் இணை­யத்­த­ளம் ஊடு­ரு­வப்­பட்­டது. போரை

நிறுத்­தும்­படி ரஷ்ய அதி­பர்

விளா­டி­மிர் புட்­டி­னுக்கு அதன்­மூ­லம் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.