போர் நடக்கும் உக்ரேனில் இருந்து மேலும் மூன்று சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்டுவிட்டனர். அந்நாட்டில் இன்னமும் ஆறு சிங்கப்பூரர்கள் உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
உக்ரேனில் ஒன்பது சிங்கப்பூரர்கள் இருப்பதாக மூன்று நாள்களுக்கு முன் மன்றத்தில் தான் தெரிவித்ததை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
தனது அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய டாக்டர் விவியன், உக்ரேனில் மனிதாபிமான உதவிகளைப் பெற சிங்கப்பூர் தொடர்ந்து முயல்வதாகக் கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவில் பத்து நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்பு விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் உக்ரேனில் போரை நிறுத்துமாறு அந்த அறிக்கை கோரிக்கை விடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உக்ரேன் பிரச்சினை தொடர்பிலான சிங்கப்பூரின் நிலை பற்றி மேலும் விவரங்களைத் தெரிவிக்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதை அவர் சுட்டினார்.
நாடுகளின் இறையாண் மையை, சுதந்திரத்தை, எல்லைகளைத் தெள்ளத்தெளிவாக மீறுகின்ற செயல்களுக்கு எதிரான ஒரு நிலையை சிங்கப்பூர் எப்படி எடுக்க வேண்டும் என்பதை விவ ரித்து தான் தாக்கல் செய்த அமைச்சர்நிலை அறிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கொவிட்-19 தொற்று பற்றியும் அதனால் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தாக்கம் பற்றியும் அமைச்சர் கருத்து கூறினார்.
கடந்த 2020ல் தொற்று தலைகாட்டியதில் இருந்து 4,600க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்ப வெளியுறவு அமைச்சு உதவி உள்ளது. விடிஎல் பயணத் திட்டம் தொடங்கு வதற்கு தமது அமைச்சு ஆதரவு அளித்துள்ளது என்றாரவர்.

