அனைத்து இந்திய நகரங்களுக்கும் 'விடிஎல்' திட்டம் விரிவாக்கம்

1 mins read

இம்­மா­தம் 16ஆம் தேதி­யில் இருந்து கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை (விடி­எல்) அனைத்து இந்­திய நக­ரங்­க­ளுக்­கும் விரி­வு­படுத்­தப்­ப­ட­வுள்­ளது. இப்­போது சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நக­ரங்­களில் இருந்து 'விடி­எல்' விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

அது­போல, கோலா­லம்­பூ­ரைத் தாண்டி பினாங்­கை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் மலே­சி­யா­விற்­கான 'விடி­எல்' திட்­ட­மும் விரி­வு­ப­டுத்­தப்­படும். வரும் 16ஆம் தேதி­யில் இருந்து நாள்­தோ­றும் சிங்­கப்­பூ­ர்-­பினாங்கு இடையே இரு­வ­ழி­க­ளி­லும் நான்கு விமா­னங்­கள் இயக்­கப்­படும்.

அத்­து­டன், பாலித் தீவை உள்­ள­டக்­கும் வகை­யில் இந்­தோ­னீ­சி­யா­விற்­கான 'விடி­எல்' திட்­ட­மும் விரிவு­ப­டுத்­தப்­படும். அதன்­படி, 16ஆம் தேதி முதல் சிங்­கப்­பூ­ருக்­கும் பாலிக்கும் இடையே நாள்­தோ­றும் இரு­வ­ழி­க­ளி­லும் இரண்டு விமா­னங்­கள் இயக்­கப்­படும்.

இத­னி­டையே, கிரீஸ், வியட்­னாம் நாடு­க­ளு­டன் புதிய 'விடி­எல்' பய­ணப் பாதை தொடங்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் பொது விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.