இலங்கை தமிழர் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா கோரிக்கை

இலங்கை தமிழர் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா கோரிக்கை

2 mins read

இலங்கை தமிழ்ச் சமூ­கத்­தின் நியா­ய­மான விருப்­பங்­களை நிறை­வேற்ற தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி இலங்கைக்கு இந்­தியா கோரிக்கை விடுத்து இருக்­கிறது.

அர­ச­மைப்­புச் சட்­டத்­திற்­கான 13வது திருத்­தத்தை இலங்கை அர­சாங்­கம் அமல்­ப­டுத்த வேண்­டும். அதன் ­மூ­லம் இலங்கை தனது குடி­மக்­கள் அனை­வ­ரின் அடிப்­படை சுதந்­தி­ர­மும் மனித உரி­மை­களும் முற்­றி­லும் பாது­காக்கப்ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று இந்­தியா வலி­யு­றுத்தி இருக்­கிறது.

ஐக்­கிய இலங்­கைக்­குள் அந்த நாட்டுத் தமி­ழர்­கள் சமத்­து­வம், நீதி, அமைதி, கண்­ணி­யம் ஆகி­ய­வற்றுடன் வாழ்­வ­தற்கு வகை செய்­வது இலங்­கைக்கும் நன்மை பயக்­கும் என்று தான் ஏற்­கெ­னவே தெரி­வித்து இருப்­பதை இந்­தியா மறு­உ­று­திப்­ப­டுத்­தி­யது.

ஜெனி­வா­வில் நடந்த மனித உரி­மை­கள் மன்­றத்­தின் 49வது கூட்­டத்­தின்­போது ஐநா மனித உரிமை அமைப்­பின் தலை­வர் வெளி­யிட்ட இலங்கை பற்­றிய அறிக்கை மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு பேசிய இந்­திய தூதர் இந்­திரா மணி பாண்டே, இலங்கை தமி­ழர்­க­ளின் நலன்­களைக் காப்­ப­தன் தொடர்­பில் இலங்­கைக்கு இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

சென்ற ஆண்டு கூட இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்­தின் மீது வாக்­க­ளிக்­கா­மல் இந்­தியா விலகி இருந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அனைத்­து­லக சமூ­கத்­து­டன் இலங்கை அர­சாங்­கம் தொடர்ந்து ஈடு­பாடு கொண்­டி­ருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய தூதர், இலங்கை அதி­கா­ரத்­தைப் பர­வ­லாக்­கப் போவ­தாக கொடுத்­தி­ருக்­கும் உறு­தி­மொ­ழி­யைச் சுட்­டினார்.

அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்­றும் வகை­யில் மாநில மன்­றங்­க­ளுக்கு முன்­கூட்­டியே தேர்­தல்களை நடத்த வேண்­டும் என்று இலங்­கையை தொடர்ந்து இந்­தியா வலி­யு­றுத்தி வரும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இலங்­கை­யின் ஒன்­பது மாநில மன்­றங்­க­ளின் நிர்­வாக ஆட்­சிக் காலம் 2018 மற்­றும் 2019ஆம் ஆண்டு­களில் காலா­வதி ஆகி­விட்­டது. அந்த மன்­றங்­க­ளுக்குத் தேர்தல் நடத்­து­வது தொடர்­பில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பு­கள் எது­வும் இடம்­பெ­ற­வில்லை.

ஐநா­வுக்­கான இந்­தி­யா­வின் நிரந்­தர பிர­தி­நி­தி­யான அவர், இலங்­கை­யில் மனித உரி­மை­கள் சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு அம்­சங்­கள் தொடர்­பி­லும் சம­ரச ஏற்­பா­டு­கள் தொடர்­பி­லும் அனைத்­துலக சமூ­கத்­தோ­டும் ஏற்­பு­டைய இதர அமைப்பு­க­ளோ­டும் இலங்கை அர­சாங்­கம் கொண்­டுள்ள ஈடு­பா­ட்டை இந்­தியா கவ­னத்­தில் கொண்டிருப்­ப­தா­க­வும் தூதர் தெரி­வித்­தார்.

இத்­த­கைய ஈடு­பா­டு­ம் பலன் தரும் கலந்­து­ரை­யா­டல்­களும் தொடர்­வ­தைக் காண இந்­தியா விரும்­பு­வ­தா­க­வும் இந்­திரா மணி பாண்டே கூறி­னார்.

ஐநா மனித உரிமை அமைப்பின் தலைமை ஆணையர் வெளி­யிட்டு உள்ள இலங்கை பற்­றிய அறிக்கை, இலங்கை­யில் சம­ர­சம், பொறுப்பேற்பு, மனித உரி­மை­கள் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பிலான கவ­லை­களை வெளிப்படுத்துவ­தாக இந்­திய தூதர் கூறினார்.

இலங்­கை­யில் கடந்த கால மனித­ உ­ரிமை மீறல்­கள், பாதிக்­கப்­பட்டோரின் உரி­மை­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம் போன்­ற­வற்றுக்குப் பொறுப்­பேற்­ப­தில் பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்டு இருப்­ப­தாக தலைமை ஆணையர் அறிக்கை குறிப்­பிட்­டது.