4,500 குடும்பங்களுக்கு வீவக வாடகை வீடு சொந்த வீடாகியது

4,500 குடும்பங்களுக்கு வீவக வாடகை வீடு சொந்த வீடாகியது

2 mins read

சிங்­கப்­பூ­ரில் அர­சாங்க வாடகை வீடு­களில் குடி­யி­ருந்த ஏறத்­தாழ 4,500 குடும்­பங்­கள், கடந்த ஐந்­தாண்­டு­களில் பல்­வேறு வீட்டுத் திட்­டங்­கள், மானி­யங்­கள் மூல­மாக சொந்த வீடு­க­ளைப் பெற்­றுள்­ளன.

இந்த எண்­ணிக்கை, வாடகை வீடு­களில் குடி­யி­ருக்­கும் மொத்த குடும்­பங்­களில் கிட்­டத்­தட்ட 9 விழுக்­காட்­டுக்­குச் சமம்.

ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக கிட்­டத்­தட்ட 2 விழுக்­காடு வாடகைக் குடும்­பங்­கள் சொந்த வீவக வீடு­க­ளைப் பெறு­கின்­றன. வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

2019லிருந்து சென்ற ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதி வரை சுமார் 1,030 வாட­கைக் குடும்­பங்­கள் சொந்த வீடு பெற வீவக வாய்ப்­பு­களை வழங்கி இருக்­கிறது.

அந்­தக் குடும்­பங்­களில் சுமார் 340 குடும்­பங்­கள் அடுத்த மூன்­றாண்­டு­களில் சொந்த வீடு­க­ளைப் பெற்­று­வி­டும் என்று கழ­கம் தெரி­வித்­தது. எஞ்­சிய குடும்­பங்­களும் சொந்­தத்­தில் வீடு பெற கழ­கம் தொடர்ந்து உத­வும்.

கடந்த 2017 முதல் 2021 வரை வீவக வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளாக மாறிய 4,500 குடும்­பங்­களில் நான்கில் மூன்று குடும்­பங்­கள், கழகத்­தி­டம் இருந்து நேர­டி­யாக வீட்டை வாங்­கின. எஞ்­சிய குடும்­பங்­கள் பகி­ரங்க சந்­தை­யில் மறு­விற்­பனை வீட்டை வாங்­கின.

அவற்­றில் பாதிக்­கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் மூவறை வீடு­க­ளை­யும் சுமார் கால்­வாசி குடும்­பங்­கள் நாலறை வீடு­க­ளை­யும் சொந்­த­மாகப் பெற்­றன.

சிங்­கப்­பூ­ரில் இப்­போது அர­சாங்க வாடகை வீடு­களில் கிட்­டத்­தட்ட 51,100 குடும்­பங்­கள் வசிக்­கின்­றன. சொந்த வீடு வாங்க வாய்ப்­புள்ள, வீட்டை வாங்க தயா­ராக இருக்­கின்ற வாடகைக் குடும்­பங்­களை வீவ­க­வின் வீட்­டு­டைமை ஆத­ரவுக் குழு தொடர்­பு­கொள்­ளும்.

இந்­தக் குழு 2019ல் அமைக்­கப்­பட்­டது. வாடகை வீடு­களில் இருக்­கும் குடும்­பங்­கள் சொந்­தத்­தில் வீடு பெற, திட்டமிடுதல் முதல் வீட்டை சொந்­த­மா­கப் பெறும்வரை­இந்தக் குழு வழிகாட்டி உதவுகிறது.

குடும்­பத்­தின் நிலை­யான வரு­மா­னம், வீட்டை வாங்க அந்­தக் குடும்­பத்­தால் முடி­யுமா போன்ற பல அம்­சங்­க­ளைக் கவ­னத்­தில்­கொண்டு வீவக மதிப்­பீடு­க­ளைச் செய்­கிறது.

இத­னி­டையே, இது பற்றி நேற்று ஃபேஸ்புக்­கில் கருத்து கூறிய தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைசல் இப்­ரா­ஹிம், மானி­யத்­து­டன் கூடிய அர­சாங்க வாடகை வீட்டுத் திட்­டத்­தின் மூலம் வீடமைப்பு வளர்ச்சிக் கழ­கம் குறைந்த வரு­மா­னம் உள்ள குடும்­பத்­தி­ன­ருக்கு உத­வு­வ­தாக குறிப்­பிட்­டார்.

அத்­த­கைய குடும்­பங்­கள் தயாராக இருக்­கும்­போது சொந்­த­மாக வீடு வாங்­க­வும் கழ­கம் உதவு­கிறது என்று அவர் கூறி­னார்.