தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடிஎல் தரை பயணப்பாதை: நாளுக்கு 3,420 பேர் சிங்கப்பூர் வர மலேசியா அனுமதி வழங்கும்

2 mins read

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான தரை பய­ணப்­பாதை (விடி­எல்) வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வர நாள்­தோ­றும் அனு­மதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை, வரும் திங்கட்­கி­ழமை முதல் 2,160லிருந்து 3,420 ஆக உயர்த்­தப்­படும் என்று மலே­சி­யா­வின் போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று அறிக்கை யில் அறி­வித்­தது.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மக்­களில் மேலும் பலர் ஜோகூ­ரில் இருந்து கடற்­பா­லம் வழி­யாக சிங்­கப்­பூர் வரு­வதற்கு அனு­ம­திக்­கும் ஒரு முயற்­சி­யாக இது இடம்­பெ­று­கிறது.

அப்­படி வரு­வோர் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டிய தேவை இல்லை. அவர்­க­ளுக்கு இதர சில கட்­டுப்­பா­டு­களும் இருக்­காது என்று அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டு­வதை ஒட்டி அதற்­குத் தோதாக பேருந்து பய­ணச்சீட்­டு­கள் விற்­பனை இன்று தொடங்­கும் என்­றும் அமைச்­சு கூறியது.

டிரான்ஸ்­டார் டிரா­வல், காஸ்வே லிங்க் ஆகிய இரண்டு நிறு­வ­னங்­களும் ஜோகூர் பாரு­வுக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் பேருந்­துச் சேவையை நடத்­து­கின்­றன.

புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக, சிங்­கப்­பூர் வந்­த­தும் செய்­து­கொள்ள வேண்­டிய பரி­சோ­தனை உள்­ளிட்ட இப்­போ­தைய விடிஎல் தரை பய­ணப்­பாதை நிபந்­த­னை­களை பய­ணி­கள் நிறை­வேற்ற வேண்டியிருக்­கும்.

கொரோனா கிரு­மி­க­ளு­டன் வாழ வேண்டிய ஒரு கட்­டத்­திற்கு மலே­சியா மாறுகிறது. அந்த மாற்­றம் ஏப்­ரல் 1 முதல் இடம்­பெ­று­கிறது. அத­னை­யொட்டி அனைத்­து­லக விமா­னங்­க­ளுக்­கான பல நிபந்­தனை­கள் தளர்த்­தப்­ப­டு­கின்­றன.

கடற்­பா­லம் வழி­யாக பய­ணம் மேற்­கொள்­வோ­ரின் பாது­காப்பை இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் சிறந்த முறை­யில் உறு­திப்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரு­டன் கூடிய விடிஎல் தரை பய­ணப்­பாதை இரு­த­ரப்பு உடன்­பாடு மூலம் தொடர்ந்து முயற்­சி­கள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஏற்­பாட்டை இரு நாடு­க­ளின் அதி­கா­ரி­கள் கூட்­டாக மறு­ப­ரி­சீலனை செய்து தேவை எனில் புதிய அறி­விப்­பு­களை விடுப்­பார்­கள் என்று மலே­சி­ய போக்கு­வ­ரத்து அமைச்சின் அறிக்கை தெரி­வித்­துள்ளது.