கொவிட்-19 நடைமுறைகள் எளிமையாக்கப்படுகின்றன

கொவிட்-19 நடைமுறைகள் எளிமையாக்கப்படுகின்றன

2 mins read

ஓமிக்­ரான் அலை அதன் உச்­சத்தை எட்­டி­யதை அடுத்து நாளுக்கு நாள் சிங்­கப்­பூ­ரில் பதி­வா­கும் புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் சரிந்து வரு­கின்­றன. இந்­நி­லை­யில், வரும் 15ஆம் தேதி­மு­தல் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை சிங்­கப்­பூர் எளி­மை­யாக்­க­வுள்­ள­தாக நேற்று நடை­பெற்ற அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக கொவிட்-19 நடை­மு­றை­கள் எளி­மை­யாக்­கப்­படும் என்று பிப்­ர­வரி 16ஆம் தேதி­யன்று கூறப்­பட்­ட­போ­தும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தால் புதிய நடை­மு­றை­கள் தொடங்­கும் தேதி தள்­ளி­வைக்­கப்­பட்­டது. சமூக ஒன்­று­கூ­டல், முகக்­க­வ­சம் அணி­தல், வேலை­யிட விதி­மு­றை­கள், பாது­காப்பு இடை­வெளி, மக்­கள் கூடும் எண்­ணிக்­கைக்கு வரம்பு ஆகிய ஐந்து அம்­சங்­கள் தொடர்­பில் இந்த நடை­மு­றை­கள் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன.

கொள்­ளை­நோய் சூழ­லில் மாற்­றம் ஏற்­பட்­டால் இந்த ஐந்து அம்­சங்­கள் தொடர்­பான நடை­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­ப­ட­லாம் அல்­லது தளர்த்­தப்­ப­ட­லாம்.

இந்த மாற்­றங்­கள், பரந்த அள­வில் விதி­மு­றை­க­ளைத் தளர்த்­து­வது ஆகாது என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று வலி­யு­றுத்­தி­னார்.

வர்த்­த­கங்­களும் தனி­ந­பர்­களும் விதி­மு­றை­களை எளி­தில் புரிந்­து­கொண்டு பொறுப்­பு­ணர்­வு­டன் செயல்­ப­டு­வதை ஊக்­கு­விக்­கவே இந்த மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­படு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி­யன்று 18,300 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இந்த உச்­சத்தை எட்­டிய பின், சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாகக் குறைந்து நேற்று முன்­தினம் 16,300 எனப் பதி­வா­கி­ய­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் சொன்­னார். வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் 0.93ஆக உள்ள நிலை­யில் நான்கு, ஐந்து வாரங்­களில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை பாதி­யா­கக் குறைந்­து­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சமூக ஒன்­று­கூ­டல்­களில் தொடர்ந்து ஐவர் மட்­டுமே கலந்து­கொள்­ள­லாம். ஆனால், வீட்­டிற்கு ஒரு சம­யத்­தில் ஐந்து விருந்­தி­னர் வரை வந்து போன பிறகு அடுத்த ஐவர் வர இய­லும். முன்­ன­தாக ஒரு நாளில் ஐவர் மட்­டுமே விருந்­தி­ன­ரா­கச் செல்ல முடி­யும்.

முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­கும் நிலை­யில், பாது­காப்பு இடை­வெளி தேவைப்­ப­டாது. தேவை ஏற்­ப­டின், ஒரு மீட்­டர் இடை­வெளி விடு­வது கடைப்­பி­டிக்­கப்­படும்.

ஊழி­யர்­களை நிறு­வ­னங்­கள் வெவ்­வேறு அலு­வ­ல­கங்­களில் அமர்த்­த­லாம். அத்­து­டன் ஐவர் கொண்ட வேலை­யி­டச் சமூக ஒன்­று­கூ­டல்­கள் மீண்­டும் தொடங்­க­லாம். குறிப்­பிட்ட சில விளை­யாட்டு இடங்­களில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 30 பேர் வரை, குழு விளை­யாட்­டு­களில் பங்­கேற்­க­லாம். சம­யம் சார்ந்த நிகழ்ச்­சி­கள், திரு­மண விருந்­து­கள் போன்­ற­வற்­றில் கலந்­து­கொள்­வோ­ரின் எண்­ணிக்­கை­யில் முன்­ன­தாக விதிக்­கப்­பட்ட வரம்பு, இனி நீக்­கப்­ப­டு­கிறது. இருப்­பி­னும் 1,000 பேருக்கு மேல் கலந்­து­கொள்­ளக்­கூ­டிய பெரி­த­ள­வி­லான நிகழ்ச்­சி­களில் 50 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே கலந்­து­கொள்­ள­லாம்.

கூடு­தல் செய்தி - பக்­கம் 2