உக்ரேனின் லுட்ஸ்க், இவானோ ஃப்ரான்கிவ்ஸ்க், நிப்ரோ நகரங்களை ரஷ்யப் படைகள் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியுள்ளன. தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரேனின் தலைநகர் கியவ்வை படைகள் நெருங்குவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய நாள்முதல் நிப்ரோ தாக்குதலுக்கு ஆளாகியது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யப் படைகள் தங்களின் முற்றுகையிடும் பாணியை மாற்றி அமைத்து கியவ்வை நெருங்குவதாக கூறப்படுகிறது. ரஷ்யா போர் தொடங்கியது முதல் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனிலிருந்து வெளியேறிவிட்டனர்.
இதற்கிடையே, மனநல மருத்துவமனை ஒன்றை ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளதாக உக்ரேன் நேற்று குற்றம் சாட்டியது. இருப்பினும், யாரும் காயமடையவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் செய்தி - பக்கம் 8

