கியவ் அருகே கடும் சண்டை

கியவ் அருகே கடும் சண்டை

2 mins read
10fea191-eb1d-4f7d-8cb5-3839af38beeb
தாக்குதலால் கியவ் நகரிலுள்ள ஒரு வீட்டில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர். படம்: ஏஎஃப்பி -

உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வுக்கு வட­மேற்கே உக்­ரேன் - ரஷ்­யப் படை­க­ளுக்கு இடையே கடும் சண்டை நடந்து வரு­வ­தாக பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்­சுத் தக­வல்­கூறு­கிறது.

கியவ் நக­ரின் மையப்­ப­கு­தி­யில் இருந்து 25 கிலோ­மீட்­டர் தொலை­வில் ரஷ்­யப் படை­க­ளின் பெரும்­பகுதி நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் மற்ற பல நக­ரங்­கள் முற்­று­கை­யிடப்­பட்டு, குண்­டு­ம­ழை­யில் சிக்கி­யுள்­ள­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

தென்­கி­ழக்­குத் துறை­முக நக­ரான மரியபோ­லில் ரஷ்­யத் தாக்­கு­த­லா­லும் 12 நாள் முற்­று­கை­யாலும் பொது­மக்­களில் குறைந்­தது 1,582 பேர் கொல்­லப்­பட்­ட­னர் என்று அந்­ந­கர மன்­றம் நேற்று முன்­தினம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்தது.

மக்­கள் பாது­காப்­பான இடங்­களில் தஞ்­ச­ம­டை­யும்­படி நேற்­றுக் காலை­யி­லும் உக்­ரே­னின் பல நக­ரங்­களில் வான்­வழி தாக்­கு­தல் அபா­யச்­சங்கு ஒலிக்­கப்­பட்­ட­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் கூறின.

இந்­நி­லை­யில், பல பத்­தாண்­டு­களில் இல்­லாத அள­விற்கு ரஷ்ய ராணு­வம் இந்­தப் போரில் பேரி­ழப்­பைச் சந்­தித்­துள்­ள­தாக உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி தெரி­வித்­துள்­ளார்.

ரஷ்­யப் படை­கள் மீண்­டும் ஒன்று­தி­ரட்­டப்­ப­டு­வ­து­போல் தெரி­கிறது என்­றும் அடுத்த சில நாள்­களில் கியவ் நக­ரைக் குறி­வைத்து தாக்­கு­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்­றும் பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, கியவ், கார்­கிவ், டோன்­பாஸ் பகு­தி­களில் ரஷ்யா புதி­தா­கத் தாக்­கு­த­லில் இறங்­க­லாம் என எதிர்­பார்ப்­ப­தாக ஒலெக்சி அரெஸ்­டோ­விச் எனும் உக்­ரே­னிய உய­ர­தி­காரி கூறி­யி­ருக்­கி­றார்.

அதே நேரத்­தில், பெல­ருஸ் ராணு­வம் ரஷ்­யப் படை­யு­டன் கைகோக்­காது என்று தாங்­கள் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக, பெல­ரு­சின் எல்­லைப்­ப­குதி கிரா­மங்­கள்­மீது வான்­வெ­ளி­யில் இருந்து துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­தாக ரஷ்­யா­மீது உக்­ரேன் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தது. "போரில் பெல­ருஸ் ராணு­வத்­தை­யும் பங்­கேற்­கச் செய்­வதை இலக்­கா­கக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட தூண்­டு­தல் நட­வ­டிக்கை இது," என்று உக்­ரேன் விமா­னப்­படை சாடியிருந்தது. இக்­குற்­றச்­சாட்­டிற்கு ரஷ்யா பதிலேதும் கூறவில்லை.

இதற்­கி­டையே, ரஷ்­யப் படை­யி­ன­ரால் கடத்­திச் செல்­லப்­பட்ட மெலிட்­டா­போல் நகர மேயரை உடனே விடு­விக்­கும்­படி அதி­பர் ஸெலன்ஸ்கி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.