நேட்டோ எல்லை அருகே ரஷ்யா நடத்திய பெரும் தாக்குதலில் 9 பேர் பலி; பலர் காயம்; உக்ரேன் அதிபர் கடும் எச்சரிக்கை உக்ரேன் ராணுவத் தளம் தாக்கப்பட்டது

நேட்டோ எல்லை அருகே ரஷ்யா நடத்திய பெரும் தாக்குதலில் 9 பேர் பலி; பலர் காயம்; உக்ரேன் அதிபர் கடும் எச்சரிக்கை உக்ரேன் ராணுவத் தளம் தாக்கப்பட்டது

2 mins read

உக்­ரேனை ஆக்­கி­ர­மித்­துள்ள ரஷ்யா, உக்­ரேன், போலந்து எல்லைப் பகு­திக்கு அருகே உள்ள உக்­ரே­னின் ஆகப் பெரிய ராணுவ நிலை மீது நேற்று ஏவு­கணை தாக்கு­தலை நடத்­தியது.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­எடுத்­தது முதல் இந்த அள­வுக்கு பெரிய தாக்­கு­தல் இது­வரை நடந்­த­தாக தெரி­ய­வில்லை என்று தக­வல்­கள் கூறு­கின்­றன.

ராணுவ தளம் மீது ரஷ்யா நடத்­திய தாக்­கு­த­லில் குறைந்­த­பட்­சம் ஒன்­பது பேர் கொல்­லப்­பட்­ட­னர். 57 பேர் காய­ம­டைந்­த­னர் என்று அந்த வட்­டார உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ரஷ்ய விமா­னங்­கள் லிவிவ் என்ற நகரில் உள்ள அந்­தத் தளத்­தில் 30 எறி­படைகளைப் பாய்ச்சி­ய­தாக வட்­டார ஆளு­நர் மாக்­சிம் கோசிட்ஸ்கி கூறி­னார்.

அந்த ராணுவ தளத்­தில் வெளி­நாட்டு ராணுவப் பயிற்றுவிப்பா­ளர்­கள் முன்பு பணி­யாற்றி வந்­தார்­கள். தாக்­கு­தல் நடந்தபோது அங்கு வெளி­நாட்­டி­னர் யாரா­வது இருந்­தார்­களா என்பதைக் கண்டறிய தாங்­கள் முயன்று வரு­வதாக உக்­ரே­னிய தற்­காப்பு அமைச்சு ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வனத்­தி­டம் தெரி­வித்­தது.

தாக்­கப்­பட்ட ராணு­வத் தளம் உக்­ரே­னின் மேற்குப் பகு­தி­யில் உள்ள ஆகப் பெரிய ராணுவ முகா­மா­கும். அது நேட்டோ நாடான போலந்­து­டன் கூடிய எல்­லை­யில் இருந்து 25 கி.மீ. தொலை­வில் உக்­ரே­னில் அமைந்து இருக்­கிறது.

ரஷ்யப் படை­யெடுப்புக்கு முன்பு அந்­தப் பகு­தி­யில் நேட்டோ நாடு களு­டன் சேர்ந்து உக்­ரேன் பல போர்ப் பயிற்­சி­களை நடத்தி இருக்­கிறது. உக்­ரே­னில் தொடர்ந்து 18வது நாளாக போர் தொடுத்­துள்ள ரஷ்யா, பல பகு­தி­க­ளி­லும் பல ஊர்­க­ளி­லும் பல நகர்­க­ளி­லும் தாக்­கு­தலைத் தீவி­ரப்­ப­டுத்தியது.

இர்­பின் என்ற நக­ரில் தெரு­வெங்­கும் இரு தரப்­பி­ன­ருக்கும் இடை­யில் மோதல் நடப்­ப­தா­க­ நேற்று ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன. இவ்­வே­ளை­யில், தலை­நகரை ஆக்­கி­ர­மிக்க முய­லும் ரஷ்ய படை­க­ளுக்கு உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி கடு­மை­யான எச்­ச­ரிக்­கையை விடுத்­தார்.

தலை­ந­கரை ஆக்­கி­ர­மிக்க முயன்­றால் ரஷ்யப் படை­க­ளுக்கு மர­ணம்­தான் மிஞ்­சும் என்று அவர் எச்­ச­ரித்­தார். "எங்­கள் மீது படை­எடுத்து இந்த வட்­டா­ரத்­தின் வர­லாற்றை அழித்து, எங்­கள் அனை­வரை­யும் துடைத்­தொ­ழித்த பிற­கு­தான் தலை­ந­க­ரில் ரஷ்யப் படை­கள் நுழைய முடி­யும்.

"வந்து பார்க்­கட்­டும், அப்­படி நுழை­யும் ரஷ்ய படை­யி­ன­ருக்கு இந்த மண்­ணில் மர­ணம்­தான் மிஞ்­சும்," என்று கடு­மை­யாக அதி­பர் ஸெலென்ஸ்கி எச்­ச­ரித்­தார்.

அதே­வே­ளை­யில், நேற்று அதி­கா­லை­யில் தலை­ந­கர் எங்­கும் எச்­ச­ரிக்கை சங்­கொ­லியைக் கேட்க முடிந்­த­தாக தக­வல்­கள் கூறின.

உக்­ரே­னில் ரஷ்யா மேற்­கொண்டு வரும் தொடர் தாக்­குதல் கார­ண­மாக பல நக­ரங்­கள் முற்றுகைக்கு இலக்­கா­கி­விட்­டன.

ஆயி­ரக்­கணக்­கான மக்­கள் சிக்­கிக் கொண்டு இருக்­கி­றார்­கள். 2.5 மில்­லியன் மக்­கள் பக்­கத்து நாடு­களுக்கு ஓடி இருக்­கி­றார்­கள்.

தலை­ந­கர் கியவ் அருகே தாக்கு­த­லில் இருந்து தப்­பித்து ஓடிய மாதர்­க­ளை­யும் சிறார்­க­ளை­யும் தாக்கி ஏழு பேரை ரஷ்ய படை­கள் கொன்­று­விட்­ட­தாக உக்­ரேன் நேற்றுக் குற்­றம் சாட்­டி­யது.

இத­னி­டையே, ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் அமை­திக்குத் தயா­ராக இல்லை என்­றே தெரி­வதாக பிரான்ஸ் கூறி­யது.

பக்கம் 8ல் மேலும் செய்தி