புவாங்காக்கில் வாளை வைத்து மிரட்டிய ஆடவர் கைது

புவாங்காக்கில் வாளை வைத்து மிரட்டிய ஆடவர் கைது

2 mins read
e6a19c41-eb48-4630-840d-33088660fc9c
வழிப்போக்கர் ஒருவரை வாளால் தாக்க முற்பட்ட ஆடவர், பின்னர் கைது செய்யப்பட்டார். படங்கள்: ஐரின் ஹோ/ஃபேஸ்புக் -
multi-img1 of 2

புவாங்­காக் வட்­டா­ரத்­தில் நேற்று பிற்­ப­கல் வாளை ஏந்தி அங்­கி­ருந்­த­வர்­களை மிரட்­டிய ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

வன்­மு­றை­யுடன் கூடிய அச்­சு­றுத்­தல், தாக்­கு­த­லுக்கு பயன்­படும் ஆயு­தத்தை வைத்­தி­ருந்­தது ஆகி­ய­வற்­றுக்­காக அவர் கைது செய்­யப்­பட்­டார்.

காவல்­து­றை­யி­னர் விடுத்த அறிக்­கை­யில் இதைத் தெரி­வித்­த­னர்.

புவாங்­காக் ஸ்கு­வேர் கடைத்­தொ­குதி அருகே ஆட­வர் ஒரு­வர் வாளை வைத்­தி­ருந்­தார் என்று பிற்­ப­கல் 1.55 மணி­ய­ள­வில் உதவி கோரி காவல்­து­றை­யி­ன­ருக்கு அழைப்பு வந்­தது.

பொது­மக்­களை நோக்கி அந்த ஆட­வர் வாளை வீசியபடி இருந்தார் என்­றும் வாளால் குறைந்­தது மூன்று கார்­களை அவர் சேதப்­ப­டுத்­தி­னார் என்­றும் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

பொது­மக்­கள் ஐந்து பேர் ஆட­வரை மடக்­கிப் பிடித்­த­னர். பின்­னர் அங்கு வந்த காவல்­து­றை­யி­னர் அவ­ரைக் கைது செய்­த­னர்.

பொது­மக்­கள் இரு­வ­ருக்­கும் வாளை வைத்­தி­ருந்த அந்த ஆட­வ­ருக்­கும் லேசான காயங்­கள் ஏற்­பட்­டன.

அந்த வாளைக் காவல்­து­றை­யி­னர் கைப்­பற்­றி­னர். இச்சம்பவம் குறித்து விசா­ரணை நடந்து வரு­வ­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில், பொது­மக்­க­ளை­யும் அவ்­வ­ழி­யா­கச் சென்ற கார்­களை­யும் நோக்கி அந்த ஆட­வர் வாளை வீசியபடி மிரட்­டு­வதைக் காட்­டும் காணொ­ளி­கள் இணை­யத்­தில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றன.

கையில் வாளை வைத்­தி­ருந்­த­படி சாலை நடுவே நடந்து சென்ற அந்த ஆட­வர், அவ்­வ­ழி­யா­கச் சென்ற குறைந்­தது மூன்று கார்­களை வாளால் தாக்கும் காட்சி காணொளியில் இடம்பெற்றது.

பின்­னர், சாலை­யைக் கடக்க காத்­தி­ருந்­த­வர்­களை நோக்­கிச் சென்ற அவர், அவர்­களில் ஒரு­வ­ரைத் தாக்க முயன்­ற­போது தடு­மாறி விழுந்­தார்.

அவர் தாக்­க­வி­ருந்த நபர், அவரை பல­வந்­த­மா­கப் பிடித்து அடக்க முயன்­றார். உடனே மேலும் சிலர் அங்கு வந்து அந்த ஆட­வ­ரைக் கட்­டுப்­ப­டுத்த உத­வி­னர்.

பொது இடங்­களில் தாக்­கு­தலுக்காக பயன்­ப­டுத்­தப்­படும் ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு மூவாண்­டு­கள் வரை சிறை தண்­ட­னை­யும் குறைந்­தது ஆறு பிரம்­படி­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­ம் நோக்கத்துடன் அச்­சு­றுத்­தும் நபருக்கு, ஈராண்­டு­கள் வரை சிறை தண்­டனை அல்­லது அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.