நியாயமற்ற விலை உயர்வை கண்காணிக்க குழு அமைப்பு

நியாயமற்ற விலை உயர்வை கண்காணிக்க குழு அமைப்பு

2 mins read

பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்­வைக் கார­ண­மாக வைத்து விலை­களை ஏற்­றும் நிறு­வ­னங்­கள் தொடர்­பான விவ­கா­ரத்­தைக் கவ­னிக்க குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்ளது. நியா­ய­மற்ற வகை­யில் லாபம் ஈட்­டு­வ­தற்கு எதி­ரான இந்­தக் குழு­வில் 13 பேர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­

க­ளின் விலை­யை­யும் சேவை­க­ளின் கட்­ட­ணத்­தை­யும் நியா­ய­மற்ற வகை­யில் ஏற்­று­வ­தன் மீது குழு கவ­னம் செலுத்­தும். குறிப்­பாக, சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் பயன்

­ப­டுத்­தும் அல்­லது பர­வ­லாக நுக­ரப்­படும் முட்டை, கோழி இறைச்சி போன்ற அன்­றா­டப் பொருள்

­க­ளின் விலை­களை அது கண்­கா­ணிக்­கும்.

வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் இக்­கு­ழு­விற்கு தலைமை ஏற்­றுள்­ளார். அதன் முதல் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. பல்­வேறு தொழிற்­கூ­டங்­கள், அடித்­தள அமைப்­பு­கள் போன்­ற­வற்­றின் பிர­தி­நி­தி­களும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் குழு­வில் அங்­கம் வகிக்­கின்­ற­னர்.

ஜிஎஸ்­டி­யைக் கார­ணம் காட்டி விலை ஏற்­று­வது குறித்து பொது­மக்­கள் கருத்து தெரி­விக்­க­வும் சந்­தே­கத்­திற்கு இட­மான வர்த்­தக நிறு­வ­னம் மீது புகார் தெரி­விக்­க­வும் பல்­வேறு தளங்­கள் இருக்­கும் என்று திரு­வாட்டி லோ கூறி­னார்.

சென்ற மாதம் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­த­போது நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் இப்­படி ஒரு குழு மீண்­டும் அமைக்­கப்­படும் என அறி­வித்­தார்.

1994ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறி­மு­கம் கண்­ட­போது லாப­வேட்­டைக்கு எதி­ரான குழு முதன்

­மு­த­லாக அமைக்­கப்­பட்­டது.

தொடர்ந்து, 2003 மற்­றும் 2007 ஆம் ஆண்­டு­களில் ஜிஎஸ்டி உயர்த்­தப்­பட்­ட­போது, இக்­குழு மீண்­டும் நிறு­வப்­பட்டு கண்­கா­ணிப்­பில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது 7 விழுக்­கா­டாக உள்ள ஜிஎஸ்டி 2023 ஜன­வரி 1 முதல் 8 விழுக்­கா­டா­க­வும் 2024 ஜன­வரி 1 முதல் 9 விழுக்­கா­டா­க­வும் உயர்த்­தப்­பட உள்­ளது.

பொது­மக்­கள் அளிக்­கும் புகா­ரின் அடிப்­ப­டை­யில் விசா­ரணை நடத்த பல்­வேறு அமைப்­பு­க­ளு­டன் இக்­குழு பங்­கா­ளித்­து­வத்தை ஏற்­ப­டுத்­தும் என்று அது நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் போட்­டித்­தன்மை மற்­றும் பய­னீட்­டா­ளர் ஆணை­யம், மக்­கள் கழ­கம், சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் போன்­றவை அந்த அமைப்­பு­கள்.

ஜிஎஸ்­டியை கார­ணம் காட்டி, வேண்­டு­மென்றே விலையை உயர்த்­தும் நிறு­வ­னங்­க­ளின் பெயர்­களை வெளி­யி­டு­வது பற்­றி­யும் குழு முடிவு எடுக்­கும். இருப்பினும் நடவடிக்கை என்ற பெயரில் நிறுவனங்கள் மீது தேவையற்ற சுமையை குழு ஏற்படுத்தாது என்று திருவாட்டி லோ கூறினார்.

ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி விலையை ஏற்றுவதன் மீது கவனம்