தாங்க முடியாத விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து இலங்கையில் இவ்வாரத் தொடக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திங்கள்கிழமை தொடங்கிய போராட்டம் மறுநாள் தீவிரமடைந்தது.
தலைநகர் கொழும்புவில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் அதிபர் மாளிகைக்கு வெளியே திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
வரலாறு காணாத ஏற்றத்தால் உணவுக்குப் பஞ்சம் ஏற்படும் நிலையை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ரொட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எதிர்த்தரப்புத் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை அகற்றுவதற்கான தொடக்க பிரசாரம் இது என்றார்.

