இந்தியப் பயணிகளை ஈர்க்க சென்னையில் இயக்கம்

2 mins read
f50f3c1a-09b1-474b-87fa-288019d69cbe
இந்தியப் பயணிகளைக் கவரும் இயக்கத்தில் 'எதிர்காலக் கனவுகள்' என்ற பெரிய வெளிப்புற ஓவியக் காட்சி சென்னையில் இடம்பெறு கின்றன. படம்: சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் -

இந்­தி­யா­வில் இருந்து அதிக சுற்றுப்பய­ணி­களை சிங்­கப்­பூருக்கு ஈர்ப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் பய­ணத் துறைக் கழ­கம் ஆயத்­த­மாகி வரு­கிறது.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் எல்­லை­கள் திறந்­து­வி­டப்படு­கின்றன. ஈராண்டு­களுக்குப் பிறகு இம்­மா­தம் 27ஆம் தேதி அனைத்­து­லகப் பய­ணங்­களைத் தொடங்க இந்­தியா திட்­ட­மிட்டு இருக்­கிறது.

அதே­வே­ளை­யில், சிங்­கப்­பூர் இம்­மா­தம் 4ஆம் தேதி முதல் இந்தி­யா­வுக்­கான விடி­எல் பய­ணப்­பாதை ஏற்­பாட்டை அனைத்து இந்திய நகர்­க­ளுக்­கும் நீட்­டித்து இருக்­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யர்­கள் விடு­மு­றை­யில் சிங்­கப்­பூ­ருக்கு வரத் தொடங்­கி­விட்­டார்­கள் என்று பயணத்துறைக் கழ­கத்­தின் இந்தியா, மத்­திய கிழக்கு, தெற்­கா­சி­யா­வுக்­கான வட்­டார இயக்­கு­நர் ஜி. பி. ஸ்ரீதர் தெரி­வித்­தார்.

இன்­னும் சில நாள்­களில் பள்ளி விடு­மு­றை தொடங்­கும்­போது இந்தி­யப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், இந்­தியச் சுற்றுப் பய­ணி­க­ளுக்கு சிங்­கப்­பூர் பற்றி மேன்­மே­லும் நினை­வு­ப­டுத்­து­வ­தற்­காக இந்­தக் கழ­கம் 'சிங்­கப்­பூர் மறு­உருவாக்கம் இயக்­கம்' என்ற ஓர் இயக்­கத்­தைத் தொடங்கி இருக்­கிறது.

அந்த இயக்­கம் நேற்று தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரான சென்னை­யில் தொடங்­கப்­பட்­டது.

அந்த இயக்­கம் தொடர்­பில் St+art India அற­நி­று­வ­னம் என்ற அமைப்­பு­டன் சேர்ந்து கழ­கம் செயல்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் கலை­ஞர் திரு­வாட்டி டினா ஃபாங்­கும் இந்­தியக் கலைஞர் திரு­வாட்டி ஓஷி­யன் சிவா ­வும் சேர்ந்து சென்னை ஃபீனிக்ஸ் மார்க்­கெட்சிட்­டி­யில் பெரி­ய­ள­வில் அமைத்திருக்கும் ஒரு காட்­சி­யும் அந்த இயக்­கத்­தில் உள்­ள­டங்­கும்.

இந்த இரு கலை­ஞர்­களும் இணைந்து கலா­சா­ரம் தழு­விய 'எதிர்­காலக் கன­வு­கள்' என்ற பெரிய அள­வி­லான ஓவி­யப் படைப்பு­களை உரு­வாக்கி இருக்­கி­றார்­கள்.

இதைத் தொடர்ந்து பார்க் ஹயட் ஹோட்­ட­லில் செயல்­படும் 'மிஸ்­டர். ஓங்-தி ஃபிளேவர்ஸ் ஆஃப் சிங்­கப்­பூர்' ஹோட்­ட­லில் இன்று சமை­யல் கலை நிகழ்ச்சி நடை­பெ­றும்.

சிங்­கப்­பூர் மறு­உருவாக்கம் இயக்­கம் வரும் மாதங்­களில் இந்தி­யா­வின் பல்­வேறு பகு­தி­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­படும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழ­கம் தெரி­வித்து உள்­ளது.