மலேசிய திடீர் தேர்தல்: ஆளும் தரப்பில் இருவேறு கருத்துகள்

மலேசிய திடீர் தேர்தல்: ஆளும் தரப்பில் இருவேறு கருத்துகள்

1 mins read

மலே­சிய ஆளும் கட்­சி­யான அம்­னோ­வின் தலை­வர் அக­மது ஸாஹித் ஹமிடி, நாடா­ளு­மன்­றத்­துக்கு முன்­கூட்­டியே பொதுத் தேர்­தல் நடத்­த­வேண்­டும் என்­ப­தில் தமது கட்சி உறு­தி­யாக இருக்க வேண்­டும் என்­றும் அதற்­காக நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கு­மாறு பிர­த­மர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப்பை நெருக்க வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

ஜோகூர் மாநி­லத் தேர்­த­லில் அம்­னோ­வுக்கு மக்­கள் அளித்த ஆத­ரவை உட­ன­டி­யா­கப் பயன்­

ப­டுத்­திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என அவர் நேற்று கட்­சி­யின் வரு­டாந்­திர பொதுக் கூட்­டத்­தில் பேசி­ய­போது குறிப்­பிட்­டார். அந்­தக் கூட்­டத்­தில் 5,571 அம்னோ உறுப்­பி­னர்­கள் நேர­டி­யா­கக் கலந்­து­கொண்­ட­னர்.

இந்நிலையில், நாடா­ளு­மன்­றத்­தைத் திடீ­ரென்று கலைப்­பது என்­பது மாமன்­ன­ரின் முடி­வைப் பொறுத்­தது என்று பிர­த­மர் இஸ்­மா­யில் கூறி­யுள்­ளார்.

"நாமாக ஒரு தேதியை முடிவு செய்து செயல்­பட்­டால் ஆட்­சிப் பொறுப்பை நாம் எடுத்­துக்கொண்­ ட­தாக மாமன்­னர் கரு­து­வார். எனவே பொறுத்­தி­ருப்­போம்," என அவர் கூறி­னார். ஆனால், முன்னதாக, திரு ஸாஹித் கூறு கையில், "ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற ரீதியில் முடிவைத் தீர்மா னிக்கும் அதிகாரம் அம்னோவுக்கு உண்டு என்றார்.