உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் கொண்டு வந்தால் தாக்குவோம்: ரஷ்யா எச்சரிக்கை

உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் கொண்டு வந்தால் தாக்குவோம்: ரஷ்யா எச்சரிக்கை

2 mins read
174963bc-da29-46e1-b759-9b5568964326
மாஸ்கோவில் நடைபெற்ற பிரம்மாண்டக் கூட்டத்தில் உரையாற்றியரஷ்ய அதிபர் புட்டின். -

உக்­ரே­னுக்­குள் ஆயு­தங்­க­ளைக் கொண்டு வந்­தால் வேடிக்கை பார்க்க மாட்­டோம். அவற்றை தாக்கி அழிப்­போம் என்று ரஷ்யா மீண்­டும் கண்­டிப்­பு­டன் கூறி­யுள்­ளது.

போலந்­து எல்­லை­யோ­ரமாக உள்ள உக்­ரே­னிய பயிற்சி நிலை­யத்தை பயங்­கர ஏவு­க­ணை­க­ளு­டன் தாக்­கிய பிறகு ரஷ்யா இவ்­வாறு எச்­ச­ரித்தது.

"நாங்­கள் ஏற்­கெ­னவே தெளி­வா­கச் சொல்­லி­விட்­டோம். உக்­ரே­னுக்­குள் எந்­தச்சரக்கு வாக­னங்­கள் நுழைந்­தா­லும் ஆயு­தங்­களை ஏற்­றிச் செல்­வ­தா­கவே நாங்­கள் நம்­பு­வோம்," என்று ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் செர்­கேய் லாவ்­ரோவ் நேற்று அர­சாங்­கம் நடத்­தும் 'ஆர்டி' ஊட­கத்­துக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வும் அதன் ஐரோப்­பிய நாடு­களும் உக்­ரே­னுக்­குள் ஆயு­தங்­களை அனுப்பி வைப்­ப­தில் முனைப்­புக் காட்­டு­வ­தா­கக் கூறப் ­ப­டு­கிறது. இந்த நிலை­யில் ரஷ்­யா­வின் எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு நான்­கா­வது வாரத்தை நெருங்­கி­யுள்­ளது.

அண்­மை­யில் நேட்டோ அந்­தப் பயிற்சி நிலை­யத்தை பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதன் மீதான ரஷ்­யா­வின் தாக்­கு­த­லில் 35 பேர் மாண்­ட­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

உக்­ரே­னில் உள்ள முதி­யோர்­கள் சுரங்­கப் பாதை­யில் உள்ள ரயில்­களில் அடைக்­க­லம் தேடி யுள்­ள­னர். இர­வில் ரயில் இருக்­கை­களை அவர்­கள் மெத்­தை­யாக பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

ரஷ்யா, ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகப் பாயக்கூடிய அதன் ஆகப்புதிய கின்ஸாஸ் ஏவு கணைகளையும் முதன்முறையாக உக்ரேனில் பயன்படுத்தியிருக்கிறது.

இந்த நிலை­யில் உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி அமை­திப் பேச்­சுக்கு இதுவே நல்ல தரு­ணம் என்று குறிப்­பிட்­டுள்­ளார். இல்­லை­யென்­றால் போர் இழப்­பு­க­ளி­லி­ருந்து ரஷ்யா மீண்டு வரு­வ­தற்கு பல தலை­முறை தேவைப்­படும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

ஆனால் உக்­ரேன் அமை­திப் பேச்சு வார்த்­தை­யில் தீவி­ரம் காட்­டி­ய­தாக இது­வரை தெரி­ய­வில்லை.

மற்­றொரு நில­வ­ரத்­தில் மாஸ்­கோ­வில் நடை­பெற்ற பிரம்­மாண்­டக் கூட்­டத்­தில் ேபசிய ரஷ்ய அதி­பர் புட்­டின், உக்­ரே­னில் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்­க­ளைப் பாராட்­டி­னார். லுஷ்­னிகி காற்­பந்து மைதா­னத்­தில் ரஷ்ய கொடி­யு­டன் திரண்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர் களிடம் புட்­டின் உரை­யாற்­றி­னார்.

"அவ­சி­யம் செய்ய வேண்­டி­யது என்ன என்­பது நமக்­குத் தெரி­யும். அதை எந்த விலை கொடுத்­தா­லும் செய்து முடிப்­போம்," என்று புட்­டின் முழக்­க­மிட்­டார்.

உக்­ரே­னு­டன் இருந்த கிரை­மி­யாவை போர் மூலம் ரஷ்­யா­வு­டன் இணைத்து எட்டு ஆண்­டு­கள் ஆன­தைக் கொண்­டா­டும் வகை­யில் இந்­தக் கூட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.