ஏப்ரலில் எல்லைகளைத் திறக்கும் மியன்மார்; வெளிநாட்டு விமானங்களுக்கு அனுமதி

ஏப்ரலில் எல்லைகளைத் திறக்கும் மியன்மார்; வெளிநாட்டு விமானங்களுக்கு அனுமதி

2 mins read
8b5ef674-ff89-44e8-b439-59f30f347030
மியன்மாரில் பாகானில் உள்ள கோயில். கொள்ளைநோய் பரவல் காரணமாக மூடப்பட்ட மியன்மார் எல்லை ஏப்ரல் 17ஆம் தேதி திறக்கப்படுகிறது. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்றி உள்ள மியன்­மார் ராணு­வம், இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு எல்­லை­க­ளைத் திறக்க முடிவு செய்­துள்­ளது.

வரும் ஏப்­ரல் 17ஆம் தேதி­யி­லி­ருந்து அனைத்து வெளி­நாட்­டுப் பய­ணி­களும் மியன்­மா­ருக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

தென்­கி­ழக்கு ஆசிய நாடான மியன்­மார் கடந்த 2020 மார்ச் மாதம் தனது எல்­லை­களை மூடி­யது. அப்­போ­து­தான் கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­யது. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப் ­ப­டுத்­தும் முயற்­சி­யாக அப்போது எல்­லை­கள் மூடப்­பட்­டன.

இதற்­கி­டையே கடந்த ஆண்டு ஆட்­சி­யைக் கவிழ்த்த ராணு­வத்­துக்கு எதி­ராக போராட்­டங்­கள் வெடித்­தன. ராணு­வம் அந்­தப் போராட்­டங்­களை இரும்­புக்­க­ரத்துடன் நசுக்­கி­யது.

இதில் பல ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­தாக உள்­ளூர் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. ராணு­வத்­தின் அட்­டு­ழி­யத்­துக்கு உலக நாடு­கள் கண்­ட­னம் தெரி­வித்­த­தோடு பல்­வேறு தடை­ க­ளை­யும் விதித்­தன. இத­னால் மியன்­மார் தனி­மைப்­ப­டுத்­தப்பட்­டது. சுற்­றுலா உள்­ளிட்ட துறை­கள் பாதிக்­கப்­பட்­ட­தால் நாட்­டின் பொரு­ளி­யல் அடி­மட்­டத்­துக்­குச் சரிந்­தது.

இந்­தச் சூழ­லில் வெளி­நாட்­டுப் பய­ணி­ளை நாட்டுக்குள் அனுமதிக்கும் முடிவை ராணுவ அர­சாங்­கம் எடுத்துள்ளது.

"ஏப்­ரல் 17 முதல் அனைத்­து­லக விமா­னங் ­க­ளுக்கு எல்­லை­கள் திறக்­கப்­படும்," என்று தேசிய கொவிட்-19 நோய்த் தடுப்பு, கட்­டுப்­பாட்டு, சிகிச்சை நிலை­யம் நேற்று அறிக்கை வாயிலாகத் தெரி­வித்­தது.

நாட்­டில் கிரு­மித்­தொற்று குறைந்து வரு­வ­தா­க­வும் அது கூறி­யது.

"சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத் தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மியன் மாருக்கு பயணிகள் சுமுகமாக வந்து செல்லவும் இந்த ஏற்பாடு உதவும்," என்று நிலையம் குறிப் பிட்டது.

வருகையாளர்கள், இரண்டு பிசிஆர் பரி சோதனைகளைச் செய்து ஒருவார காலம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக் கின்றன.

கடந்த ஆண்டு மியன்மாரில் தொற்றுச் சம்பவங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோது தினசரி 40,000 வரை பாதிக்கப்பட்டனர். இதுவரை 20,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.