இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலப்புரம் காளிகாவ் நகரில் முக்கியமான இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையில் நடந்த காற்பந்து போட்டியின்போது மூங்கில், மரப்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் திடீரென சரிந்து விழுந்ததில் ரசிகர்கள் 200 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 10 பேருக்குக் கடும் காயம் ஏற்பட்டதாகவும் பலர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தகவல்கள் குறிப்பிட்டன.

