மின்சாரத் தேவையை சமாளிக்க அணுவாற்றல்

3 mins read

சிங்­கப்­பூ­ரில் ஒரு­கா­லத்­தில் பொருந்­தாது என்று கரு­தப்­பட்ட அணு­வாற்­றல், 2050ஆம் ஆண்­டுக்­குள் நாட்­டிற்கு மின்­சா­ரம் அளிக்­கக்­கூ­டி­ய­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட புதிய அறிக்கை ஒன்று தெரி­வித்­தது.

எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் தயா­ரித்­துள்ள அந்த அறிக்கை, நாட்­டின் மின் தேவை­யில் கிட்­டத்­தட்ட 10 விழுக்­காட்டை 2050ஆம் ஆண்­டுக்­குள் அணு­வாற்­றல் பூர்த்தி செய்­யக்­கூ­டும் என குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், அணு­வாற்­றல் தொழில்­நுட்­பத்­தின் நவீ­ன­முறை அந்த ஆற்­ற­லைப் பாது­காப்­பா­ன­தா­க­வும் நம்­பத்­த­குந்­த­தா­க­வும் பரா­ம­ரிக்க உத­வும் என­வும் அறிக்கை கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் அணு­வாற்­ற­லைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் மூன்று வித­மா­கக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக 'எரி­சக்தி 2050 குழு' என்­னும் அந்த அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

பரு­வ­நிலை இலக்­கு­களை அடைய நாடு­கள் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­வதை வெவ்­வேறு நாட்­டின் வெவ்­வேறு தன்மை கடி­ன­மாக்கி உள்­ளது. வட்­டார அள­வில் மின் உற்­பத்தி மெது­வ­டைந்து வரு­வ­தால் சிங்­கப்­பூ­ரின் எரி­சக்­தித் தேவைக்­கான மின்­சார இறக்­கு­ம­தி­யின் பங்கு வரம்­புக்­குள் இருக்­கும் என அறிக்கை தெரி­வித்­தது. இது ஒரு விதம்.

வேறு இரண்டு விதங்­க­ளைப் பார்க்­கை­யில், சிங்­கப்­பூ­ரின் எரி­சக்­தித் தேவைக்கு மின்­சார இறக்­கு­மதி முக்­கி­ய­ பங்­காற்­று­கிறது.

அந்த வகை­யில், பரு­வ­நிலை தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளை­யும் தொழில்­நுட்­பத்­தை­யும் நவீ­னப்­

ப­டுத்த நாடு­கள் விரைந்து ஒன்­றி­ணை­வது ஒரு போக்கு.

அதே­நே­ரம் கொவிட்-19 கொள்­ளை­நோ­யில் இருந்து மீட்சி காண அதிக காலம் தேவைப்­ப­டு­தால் தொழில்­நுட்ப நவீ­னமயம் தடை­பட்ட நிலை­யில் நாடு­கள் ஒன்­றுக்­கொன்று ஒத்­து­ழைக்­கும் போக்கு என்று அறிக்கை விளக்கி உள்­ளது.

"2012ஆம் ஆண்டுவாக்­கில் அர­சாங்­கம் மேற்­கொண்ட ஆய்­வின்­படி அணு­வாற்­றல் கிடைக்­கும் நிலை­யி­லும் அதனை இங்கு அமைப்பது பொருத்­த­மா­காது என்று வெளி­யி­டப்­பட்­டது.

"ஆனால், அந்தக் கால­கட்­டத்­திற்­குப் பிறகு அணு­வாற்­றல் தொழில்­நுட்­பம் மேம்­பட்டு வந்­துள்­ளது. பல நாடு­களில் புதிய அணு­வாற்­றல் தொழிற்­சா­லை­கள் வடி­வ­மைக்­கப்­பட்டு சோதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது இயங்­கும் மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளை­விட அணு­வாற்­றல் உற்­பத்தி நிலை­யங்­கள் பாது­காப்­பைத் தரக்கூடிய வாய்ப்பு உள்­ளது.

"சீனா, பிரான்ஸ், அமெ­ரிக்கா மற்­றும் ரஷ்யா போன்ற நாடு­களில் அணு­வாற்­றல் உற்­பத்தி நிலை­யங்­க­ளைக் காண­லாம்.

"சிங்­கப்­பூர் அதன் மின்­சா­ரத் துறை­யின் கரி­மக் குறைப்­பில் வரம்­புக்கு உட்­பட்ட தெரி­வு­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தால், எரி­சக்­திச் சந்தை ஆணை­யம், அணு­வாற்­றல் தொழில்­நுட்­பங்­களை இங்கு நிறு­வு வது தொடர்­பான அம்­சங்­களை தீவி­ர­மாக ஆரா­யந்து வரு­கிறது," என்று அறிக்கை விவ­ரிக்­கிறது.

இவ்­வாறு அணு­வாற்­ற­லைப் பரி­சீ­லிக்­க­லாம் என அர­சாங்­கம் முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தற்கு உலக எரி­சக்தி நெருக்­கடி ஒரு கார­ணமா என்று கடந்த ஜன­வரி மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் வின­வப்­பட்­டது.

அதற்கு அப்­போது பதி­ல­ளித்த வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங், நவீன அணு­வா­யுத உலைத் தொழில்­நுட்­பங்­க­ளை­யும் வடி­வ­மைப்­­புகளையும் தமது அமைச்சு கவ­னித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"விரைவாக ஏற்படுத்தக்கூடிய சிறிய வகை அணு உலைகளும் கவனிக்கப்படுகின்றன. பெரிய அணு உலைகளை ஏற்படுத்த சாத்தியமற்ற இடங்களில் இவற்றை அமைக்கலாம்," என்று கூறினார்.

இவற்றில் பல இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே இருப்பதாகவும் வர்த்தக நடவடிக்கைகளை இனிதான் தொடங்க வேண்டும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு அணு வாற்றல் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டத்தைத் தொடங்க சிங்கப்பூர் $63 மில்லியனை ஒதுக்கியது.

பல்வேறு வர்த்தக, சிறிய அணு உலைகளின் வடிவமைப்புகள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு 2030ஆம் ஆண்டுவாக்கில் உலக அளவில் கிடைக்கக் கூடும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் பயன்படுத்துவது பற்றி சிங்கப்பூர் ஆராயும்